பெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு . இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.
நாடுமுழுவதும் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் டீசல் விலை ரூ.76-க்கும் குறையாமல் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந் துள்ளது மற்றும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித் துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.., ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் , பெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்துள்ளதாக மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.மக்களின் மீதான சுமையை குறைக்கும்வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பெட்ரோல்ரூ. 83.26 -க்கும் டீசல் ரூ.77.17க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.