மல்லையாவை இயக்குவது யாரோ?

இந்தச் சர்ச்சைகளே 2019 லோக் சபா தேர்தலுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கான ஒருபகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒருவார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக் குள்ளாக்கியது. லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்து செட்டில் செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

மல்லையா போன்ற ஒருபொய்யரின் கூற்றை வைத்துக்கொண்டு எந்த அடிப்படையில் அருண் ஜேட்லியை சந்தேகிக்க முடியும். காங்கிரஸ்தான் அதை செய்தது. சில ஆயிரம்கோடி ரூபாய்கள் வங்கிக்கடனை மோசடி செய்து விட்டு லண்டனில் நாடுகடுத்தும் வழக்கை சந்தித்துவருகிறார்.

வாராக்கடன்களில் சிக்கிய வங்கிகளின் எண்ணிக்கை 16. இந்த வங்கிகளிலிருந்து கடன்பெற்றவர்கள் அனைவரும் பண முதலைகள். இதில் மல்லையாவும் ஒருவர்.

அவர் கடனைத் திருப்பித்தருகிறேன் என்று கூறியதை வங்கிகள் ஏற்கவில்லை, இதனையடுத்து அருண் ஜேட்லியை மாநிலங்களவைக்கு வெளியே சந்தித்துள்ளார், ஒரு எம்.பியாக அங்குசுற்ற அவருக்கு உரிமை உள்ளது. இதை வைத்துக்கொண்டு அருண் ஜேட்லியையும் குற்றவாளி என்று காங்கிரசின் பூனியா கூறுவது முழுதும் முட்டாள்தனமானது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏமாற்றியது மல்லையா மட்டுமல்ல, இன்று பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடத் தான் நிரவ் மோடி தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன. எனவே ராகுல் காந்திதான் நிரவ் மோடி தப்பிக்கக் காரணம் என்று கூற முடியுமா?

இவ்வளவு ஆண்டுகள் கழித்து மல்லையா இதனை தெரிவிக்கிறார், ஜேட்லி-மல்லையா சந்திப்பு முன்னரே தெரியுமென்றால் காங்கிரஸ் ஏன் இத்தனை நாட்களாக வாயை மூடி கொண்டிருந்தது?

அல்லது மல்லையாவின் பின்னால் யாரோ அவரை இயக்கி இத்தகையகூற்றுகள் அவரிடமிருந்து வருகிறதா? இவையெல்லாமே 2019 தேர்தலுக்கான தயாரிப்புகளே. விரும்ப தகாதவர்களை நீக்கி விடுவதற்கான முயற்சி, இப்போது ஜேட்லிக்கு இதுநடந்துள்ளது.

போபர்ஸ் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட குவாட்ரோக்கி காங்கிரஸ், சிபிஐ உதவியில்லாமல் தப்பியிருக்க முடியுமா?

நன்றி சாம்னா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...