ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது

பிரதமர் மோடியின் கனவுதிட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. சிறு முறைகேடு நடந்தாலும், அதைகண்டுபிடிக்கும் வகையில், 'சாப்ட்வேர்' எனப்படும் மென்பொருளை உருவாக்க, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, 5லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவசெலவை, மத்திய அரசே ஏற்கிறது. இந்ததிட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

 

உலகின் மிக பெரிய சுகாதார திட்டமாக, இது கருதப்படுகிறது. இந்ததிட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.இந்த திட்டத்தை, எந்தவித முறைகேடும் இன்றி செயல் படுத்துவதற்கான விதிமுறைகளை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.

இந்த திட்டம் பற்றி, மத்திய சுகாதாரத் தறை வட்டாரங்கள் கூறியதாவது: ஏழைகளுக்கும், தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இந்ததிட்டத்தை அறிவித்துள்ளது.இதில், முறைகேடு நடப்பதை சிறிதும் சகிக்கமுடியாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஆயுஷ்மான் திட்டத்தின் பலன், மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என, பிரதமர் மோடி விரும்புகிறார்.

முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும்வகையில், பயனாளிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை பெறும்போது, மருத்துவ மனைகளில், இந்த அட்டையை காட்டினால் போதுமானது. அதற்கான தொகையை மருத்துவமனைக்கு, அரசு வழங்கிவிடும்.பயனாளிகளுக்கு தனிஅட்டை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், மாவட்ட தலைநகரங்களுக்கு இந்த அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

'மருத்துவ காப்பீடு திட்டங்களில், மோசடிகள் அதிகளவில் நடக்கின்றன' என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர்கூறியதாவது: முறைகேடு, தவறாக பயன் படுத்துதல் போன்றவற்றுக்கு, மருத்துவ காப்பீடு திட்டங்கள் பெயர்பெற்றவை. இது திட்டத்தின் நிதிநிலையை மட்டும் பாதிக்கிறது என கருதமுடியாது. மக்களின் உடல் நலத்துக்கே ஆபத்தாக அமைகிறது.அதனால்தான், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. முறைகேடுகளை துவக்கத்திலேயே கண்டுபிடித்துதடுக்க, புதிய சாப்ட்வேர் உருவாக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...