மத்திய அரசின் ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று 5-வது வெபினார் ஆன்லைன்நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள், செவிலியர்கள், சுகாதார, தொழில்நுட்ப, ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி யில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டு மக்களின் உடல்நலத்தில் கவனம்செலுத்துவது மட்டுமல்லாமல், அனைவருக்கும் அதை சமமானதாக மாற்றுவதிலும் கவனம்செலுத்தி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றை உலக அளவில் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும், சர்வதேசபாரம்பரிய மருத்துவ மையத்தை உலக சுகாதார நிறுவனம் விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளது. கரோனாதொற்று பரவிய போது, தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கும் மருத்துவஉதவி, ஆலோசனைகள் கிடைக்கும் வகையில், டெலிமெடிசின்உட்பட பலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பத்தை மருத்துவ பயன்பாட்டுக்காக மேம்படுத்த வேண்டும். நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதாரத்துறையை சீர்திருத்தம்செய்து மக்களுக்கு முழு அளவில் பயன்தரும் வகையில் மேம்படுத்தி வருகிறோம்.

தற்காலத்துக்கு ஏற்றவகையில், மருத்துவ அறிவியல் சார்ந்த உட்கட்டமைப்புகள் மேம்படுத்தல், மனிதவளம், ஆயுஷ் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தல் போன்றவற்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ வசதிகிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வட்டார, மாவட்டஅளவில் கிராமங்களுக்கு அருகில் தீவிர சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதை செயல்படுத்த தனியார் துறையினரும் மற்ற துறையினரும் முன்வரவேண்டும்.

மருத்துவ சேவைக்கு தேவை அதிகரித்துவருவதை கருதி, மருத்துவ நிபுணர்களின் எண் ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சித்து வருகிறோம். மருத்துவக்கல்வி மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பட்ஜெட்டில் அதிகநிதி ஒதுக்கப் படுகிறது. ‘கோவின்’ மற்றும் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்மிஷன்’ ஆகிய திட்டங்கள், நுகர்வோர் – சுகாதார துறையில் சேவை வழங்குவோர் என இருதரப்பினரும் எளிதாக தொடர்பு கொள்வதற்கு வழி வகுத்துள்ளது. இதன்மூலம் மக்கள் எளிதாக சிகிச்சை பெறவும் மருத்துவதுறையினர் எளிதாக சிகிச்சை அளிக்கவும் முடிகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சிலமாநிலங்களில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 இலக்க சுகாதாரஎண் (ஹெல்த் ஐ.டி.) வழங்கப்படும். இதை ஆதார் மற்றும் மொபைல் எண் உதவியுடன் இதற்கான இணையதளத்தில் பதிவுசெய்து சுகாதார அடையாள எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த எண் மூலம் ஒருவரின் மருத்துவ தகவல்களை ஆண்டுகணக்கில் பாதுகாக்க பயன்படும்.

இதன்மூலம் என்னென்ன பிரச்சினைகளுக்கு என்னென்ன சிகிச்சை எப்போதெல்லாம் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை பதிவுசெய்து கொள்ளலாம். இவற்றின் மூலம் எங்கு சென்றாலும், இந்த தகவல்களை இணையதளத்தில் பார்த்து எதிர்காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதாக சிகிச்சை பெறமுடியும். பழைய மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்களை பாதுகாக்கவோ அல்லது ஒவ்வொருமுறை சிகிச்சை பெறும்போது எடுத்துச் செல்லவோ தேவை இருக்காது. தற்போது இத்திட்டத்தை நாடுமுழுவதும் அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கி உள்ளது.

இதுகுறித்து பொருளாதார விவகாரத்துக்கான கேபினட்கமிட்டி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை நாடுமுழுவதும் அமல்படுத்த, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது. இத்திட்டம் ரூ.1,600 கோடியில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இதை தேசியசுகாதார ஆணையம் அமல்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...