யதார்த்த உண்மைகளை உங்களால் மாற்ற முடியாது

ரஃபேல் ஒப்பந்தம், 15 தொழிலதிபர்களின் கடன்தள்ளுபடி என ஒவ்வொரு விஷயத்திலும், கோமாளியைப் போல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்கூறி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, வாராக்கடன் தொகை, ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்தது காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மைகளை அவர்கள் மூடிமறைத்து விட்டனர். மேலும், கடன் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் நிதி மோசடியாளர்கள் காப்பாற்றப் பட்டனர்.


கடந்த 2015-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சொத்து தரமதிப்பீட்டுக் குழு, வாராக் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது தான், நாட்டின் உண்மையான வாராக்கடன் ரூ.8.96 லட்சம் கோடி என்று தெரிய வந்தது.
இந்த வாராக் கடன் அதிகரிப்புக்கு தற்போதைய மத்திய அரசு காரணமல்ல. மேலும், வாராக் கடனை வசூலிப்பதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தவொரு ஆக்கப் பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க வில்லை. வங்கியில் வாங்கப்பட்ட கடனுக்கு முறையாக தவணை தொகைகள் செலுத்தப்பட வேண்டும். 90 நாள்களுக்கு மேல் கடன்நிலுவை செலுத்தப்படா விட்டால், அந்தக்கடன் வாராக்கடனாகக் கருதப்படும். மோசடியாளர்களின் சொத்துகளை ஏலம்விட்டு கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, வங்கி திவால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், 12 முக்கிய கடனாளிகளை ரிசர்வ்வங்கி கண்டறிந்துள்ளது. பல்வேறு வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் நிலுவை, வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சம் கோடியாக கணக்கிடப் பட்டுள்ளது. இந்நிலையில், ராகுல்காந்தி தொடர்ந்து பொய் கூறுவதால், யதார்த்த உண்மைகளை அவரால் மாற்ற முடியாது

நன்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...