துல்லியத் தாக்குதல் நினைவு தினம் அரசியல் இல்லை

துல்லியத் தாக்குதல் நினைவு தினத்தைக்கொண்டாட பல்கலைக் கழகங்களுக்கு அறிவுறுத்தியதன் பின்னணியில் அரசியல் இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்  தெரிவித்தார். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்தியராணுவ வீரர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 29-ஆம் தேதிகளில் துல்லியத் தாக்குதல்களை நடத்தினர். இந்தத்தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. அப்போது இந்திய ராணுவ வீரர்களால் பதிவுசெய்யப்பட்ட விடியோ காட்சிகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. 

அப்போது, உத்தரப் பிரதேச தேர்தலுக்காக ராணுவவீரர்களின் தியாகத்தை மோடி தலைமையிலான மத்திய அரசும், பாஜகவும் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். 

இந்த துல்லியத்தாக்குதல் நடைபெற்று வரும் 29-ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 29-ஆம் தேதியை துல்லியத்தாக்குதல் தினமாக அனுசரிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. அன்றைய தினத்தில், என்சிசி மாணவர்களை கொண்டு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ அதிகாரிகளை கொண்டு சிறப்புவகுப்புகள் நடத்த கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று கூறுகையில், 

"அனைத்து பல்கலைக்கழகங்களையும், துல்லியத்தாக்குதல் நினைவு தினத்தை கொண்டாடுமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளதன் பின்னணியில் அரசியல் இல்லை. அது தேசப்பற்று தான். அதனை கொண்டாட வேண்டும் என்கிற கட்டாயமோ, நிர்பந்தமோ கல்வி நிறுவனங்களுக்கு கிடையாது.

இந்த துல்லிய தாக்குதலை அரசு அரசியலாக்குகிறது என்று எதிர்க் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியது, முற்றிலும்தவறானது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறுபட்டுள்ள பாஜக கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை மட்டும்தான் வழங்கியுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சி என்றால், அவர்களுடைய முடிவை கட்டாயமாக்கி திணிப்பார்கள். 

பல்கலைக் கழகங்களுக்கு அறிவுரைதான் வழங்கப்பட்டுள்ளது, இதில் எங்கே இருக்கிறது அரசியல்? இது அரசியல் அல்ல தேசப் பற்று. துல்லியத் தாக்குதல் குறித்தும், ராணுவவீரர்கள் எவ்வாறு களப்பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்" என்றார். 

கடந்த ஆண்டு ஏன்  இதனை கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, நல்ல யோசனைகளை எப்போது வேண்டு மானாலும் செயல்படுத்தலாம் என்றார் ஜாவடேகர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...