அயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல

முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அயோத்தியல்ல, மெக்காதான் என மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார். 

அயோத்தி வழக்கில், இஸ்லாம்ற்கு இன்றியமையாத பகுதியாக மசூதியைக் கருதமுடியாது என்று 1994ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற கூறியதை மறுபரிசீலனை செய்யக் கோரியும், இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரியும் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. 

இதில் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 3 பேரில் இரண்டு நீதிபதிகள் , அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று கூறியதால் அதுவே தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது. “1994ம் ஆண்டு தீர்ப்பு நிலம் கையகப் படுத்துதல் சம்பந்தமானதே தவிர, அது மதம் சம்மந்தமானது அல்ல. ஆதாரங்கள் அடிப்படையில் சிவில்வழக்கு முடிவு செய்யப்பட வேண்டும். 1994ம் ஆண்டு தீர்ப்புக்கும் தற்போதையை வழக்குகளுக்கும் தொடர் பில்லை” என நீதிபதிகள் கூறினர். 

மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்குசொந்தம் என்ற மூல வழக்கில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. துணை வழக்கு முடிவுக்குவந்த நிலையில், மூல வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் உமாபாரதி கூறுகையில், “இது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். அயோத்தி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நான் வரவேற்கிறேன். விரைவில் தீர்ப்புவரும் என நம்புகிறேன். தற்போது, எல்லா விவகாரங் களையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த விவகாரத்தை நீதி மன்றத்தில் வெளியே தீர்த்து இருக்க முடியும். அயோத்தி என்பது இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல. அவர்களுக்கு மெக்காதான் புனித இடம்” என்றார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் ...

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரத ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...