அயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல

முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அயோத்தியல்ல, மெக்காதான் என மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார். 

அயோத்தி வழக்கில், இஸ்லாம்ற்கு இன்றியமையாத பகுதியாக மசூதியைக் கருதமுடியாது என்று 1994ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற கூறியதை மறுபரிசீலனை செய்யக் கோரியும், இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரியும் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. 

இதில் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 3 பேரில் இரண்டு நீதிபதிகள் , அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று கூறியதால் அதுவே தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது. “1994ம் ஆண்டு தீர்ப்பு நிலம் கையகப் படுத்துதல் சம்பந்தமானதே தவிர, அது மதம் சம்மந்தமானது அல்ல. ஆதாரங்கள் அடிப்படையில் சிவில்வழக்கு முடிவு செய்யப்பட வேண்டும். 1994ம் ஆண்டு தீர்ப்புக்கும் தற்போதையை வழக்குகளுக்கும் தொடர் பில்லை” என நீதிபதிகள் கூறினர். 

மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்குசொந்தம் என்ற மூல வழக்கில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. துணை வழக்கு முடிவுக்குவந்த நிலையில், மூல வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் உமாபாரதி கூறுகையில், “இது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். அயோத்தி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நான் வரவேற்கிறேன். விரைவில் தீர்ப்புவரும் என நம்புகிறேன். தற்போது, எல்லா விவகாரங் களையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த விவகாரத்தை நீதி மன்றத்தில் வெளியே தீர்த்து இருக்க முடியும். அயோத்தி என்பது இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல. அவர்களுக்கு மெக்காதான் புனித இடம்” என்றார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...