இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்திய தினத்தை, ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். 1950 ஜன., 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, அரசியலமைப்பு சட்டமாக மாறின. இச்சட்டத்தின் படி நம் நாடு இயங்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015, நவ., 26ல், சட்ட தினம் கொண்டாட உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அரசியலமைப்பு சட்ட தினத்தன்று ( இன்று நவ. 26), உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.காவி, சூர்யகாந்த், உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அரசியலமைப்பின் மதிப்பை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தவும், இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் உரையில் இடம் பெறுகிறது.

பார்லி.யில் ஜனாதிபதி உரை

அரசியலமைப்பு தினத்தையொட்டி இன்று (நவ. 26) பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுவதற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...