உண்மையை சொல்வோம்!

நல்லதை எடுத்துரைக்க நல்லவர்கள் வேண்டும்! ஜனநாயகத்தில் பிரச்சாரம் முக்கியம்! பொய் பிரச்சாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வலைப்பின்னல் இருக்கிறது! தண்ணீர் சுடுகிறது என சொல்லி ஒப்பாரி வைக்க இங்கே ஊடகங்களும் பத்திரிக்கைகளும் உள்ளன! ஆனால் உண்மையை சொல்ல யாரும் இல்லை!

ஊடகங்களும் பத்திரிக்கைகளும் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்! எனவே அவர்கள் உண்மையை மதிக்கமாட்டார்கள்! வேறு வழி ஏதும் இல்லை என்றால்தான் உண்மையை சொல்வார்கள்!

உண்மையை நாம் வாய்வழியேதான் பரப்பவேண்டும்! பொய்கள் ரக்கை கட்டி பறக்கின்றன! உண்மைகள் கால்கொண்டாவது நடக்கட்டுமே!

பெட்ரோல் விலைக்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை!

“பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் இந்திய அரசுகளுக்கும் சம்மந்தம் இருக்கிறது! அதாவது வரி விதிப்பதுதான் அந்த சம்மந்தம்! மத்திய அரசு கலால் வரி என ஒரு வரியை விதித்து அதில் 40 சதவிகித்த்தை மாநில அரசுகளுக்கு கொடுத்து விடுகிறது! அந்த பங்கையும் பெற்றுக்கொண்டு மாநில அரசுகள் ஏன் பெட்ரோல்மீது வரிவிதிக்கவேண்டும்? 40 சதவிகிதம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் மாநில அரசுகள் மீண்டும் வரிவிதிப்பதுதான் பெற்றோல் அதிக விலைக்கு காரணம்!

சுதந்திரத்திற்குப் பின்பு அனைத்து மாநில அரசுகளும் காங்கிரசிடம்தான் இருந்தது! மத்திய அரசும் காங்கிரஸ் தான்! மத்தியிலும் மாநிலத்திலும் பெட்ரோல் மீது வரி போட்டார்கள் காங்கிரஸ் கார்ர்கள்! இது அனியாயமான அணுகுமுறையாகும்!

இந்த அனியாய அணுகுமுறையை அடிப்படையாக வைத்தே மத்திய மாநில அரசுகள் தங்களின் வருடாந்திர வரவு செலவு திட்டங்களையே வகுத்து வந்தார்கள்!

இப்போது பாஜக மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி செய்கிறது! அப்போது 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கார்ர்கள் குறைக்காத பெட்ரோல் விலையை இப்போது பாஜக குறைக்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் இது எந்த வகையில் நியாயம்?

காங்கிரஸ் துவக்கி நடைமுறைப்படுத்திய நடைமுறைப்படி பெட்ரோல் வரியை வைத்து பட்ஜெட் போட்டு பழகியபின்பு, இப்போது பெட்ரோல் வரியை நீக்கிவிடுங்கள் என்று சொல்வது எந்தவையில் நியாயம்?

எத்தனால். மித்தனால் ஆகிய பெட்ரோலில் கலக்க வல்ல இயற்கை எரி பொருட்களை தயாரிக்கும் ஆலைகளை பாஜக அரசு நிறுவி வருகிறது! அது பலந்தர சில ஆண்டுகள் ஆகும்! அதுவரையில் பொட்ரோல் விலையில் பாஜக வை சம்மந்தப்படுத்தி பேசுவது குற்றமாகும்!

பாஜக அரசு நிறுவிவரும் எத்தனால் மித்தனால் ஆலைகளின் உற்பத்தி பெருகியபின்பு டீசல் விலை குறையும் அப்போது பாஜகவை பாராட்டவேண்டியது மக்களின் கடமையாகும்! இப்போதைய பெட்ரோல் விலைக்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை!

ராகுலுக்கு என்ன ஆனது?

போர்பர்ஸ் ராணுவ விமானம் வாங்கியதில் ரூபாய் 64 கோடி கமிசன் வாங்கியதால் மாட்டிக்கொண்ட கட்சி காங்கிரஸ்!

சொகுசு கெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ. 260 கோடி கொள்ளையடிக்க திட்டமிட்டது காங்கிரஸ்!

விசயம் வெளியே கசிந்து விட்டதால் சொகுசு கெலிகாப்டர் ஒப்பந்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது!

2007 ல் ஒப்பந்தமிட்டு ரபேல் விமானத்தை வாங்கிட இறுதி கையெழுத்துப் போடாமல்; கமிசன் படியாமல்; இழு இழு என இழுத்துக்கொண்டிருந்தது காங்கிரஸ்!

கமிசன் ஏதும் தேவையில்லை என ஒரு விமானத்திற்கு ரூ. 59 கோடி குறைந்த விலையில் அதிக தொழில் நுட்பமும் ரகசியங்களும் அடங்கிய ரபேல் விமானங்கள் 36 ஐ, ரூ. 58 ஆயிரம் கோடியில் வாங்கியது பாஜக அரசு! 126 விமானங்களில் எஞ்சியதை இந்தியாவில் தயாரித்து வழங்கவேண்டும் என்பது ஒப்பந்தம்!

ஏதாவதொரு இந்திய கம்பெனியை சேர்த்துக்கொண்டு விமானத்தை தயாரிக்கவேண்டும் என்பது விதி!

இந்த விதியை அந்த ரபேல் ஒப்பந்தத்தில் சேர்த்ததும் காங்கிரஸ் அரசுதான்! அதன்படி அனில் அம்பானிக்கு சொந்தமான கம்பெனியை 2012 ல் சேர்த்ததும் காங்கிரஸ் அரசுதான்!  

இப்போது கமிசனுக்கே வழியில்லாமல் பாஜகவினர் வியாபாரத்தை முடித்துவிட்டார்களே என்னும் எரிச்சலில், அனில் அம்பானி குடும்பத்திற்கு பாஜக உதவுவது ஏன்? என்று பைத்தியக்காரத்தனமாக கேட்கிறார்கள்!

உண்மையில் இந்த கேள்வியை கேட்கும் ராகுலுக்கும் மற்றவர்களுக்கும் பைத்தியம்தான் பிடித்திருக்கும் போல! ஏனென்றால் 2012 ல் காங்கிரஸ் ஆட்சியில்தான், ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் கம்பெனி சேர்க்கப்பட்டது!

நட்த்தை கெட்ட பெண்ணை கேட்டால், நான் மட்டுமா? அவளும்தான் .. இவளும்தான் … என ஒரு பட்டியலையே நீட்டுவாள்!  ஊழல் வாதியை கேட்டால் நாட்டில் எங்கேதான் ஊழல் இல்லை என்பான்! குடிகாரனை கேட்டால் யார்தான் குடிக்கவில்லை என்பான்!

காங்கிரசை கேட்டால் யார்தான் ஊழல் செய்யவில்லை என சொல்ல விரும்பி, பாஜகமீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முயலுகிறது! உண்மையில் பாஜகமீது ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லை!

மக்கள்தான் பாஜகவின் பிரச்சாரப்படையாக விழங்கவேண்டும்!

 

பயிர் காப்பீடு திட்டம் தந்து பாரத விவசாயிகளை தற்கொலைகளில் இருந்தும், கடன் சுமைகளில் இருந்தும் காப்பாற்றியது வாஜ்பாய் ஆட்சியில் பாஜக அரசு!

எவ்வித பிணையமும் இல்லாமல் மாணவர்கள் உயர்படிப்பு படிக்க கல்விக்கடன் வழங்கி பாரதத்தில் கல்வி கண்களை திறந்தது, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு!

மதுரை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கி பெண்களுக்காக பிற்காலத்தில் ஆண்களுக்காகவும் சுய உதவிக்குழுக்களை துவக்கியது வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு!

அணுக்குண்டு வெடித்து உலகை எச்சரித்ததும், கார்க்கிலில் ஜெயித்து தேசம் காத்ததும் பாஜக அரசு!

தங்க நாற்கர சாலைகளை தந்து, எரிபொருள் செலவை குறைத்து விலைவாசியை குறைத்தது பாஜக அரசு!

கள்ளப்பணம் கருப்புப்பணம் ஒழித்து, பதுக்கலை தடுத்து, ஜி.எஸ்.டி நடைமுறையால் வரியினை குறைத்து, வீட்டின் விலை, வீட்டு மனையின் விலை,  அரிசி, உழுந்து, பருப்பு, மிளகு என அனைத்து பொருட்களின் விலையையும் 15  முதல் 30 சதவிகிதம் குறைத்தது பாஜக அரசு! இதனால் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 2000 முதல் 5000 வரை பணம் மிச்சமாகியுள்ளது!

ஒரு குடும்பத்திற்கு ஒரு வருட்த்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்து மக்கள் ஆரோக்கியம் காக்கிறது பாஜக அரசு!

தினமும் ஒரு ரூபாய் மாதம் ஒரு ரூபாய் என எழிய திட்டங்களின் மூலம் ரூபாய் 4 லட்சம்வரை காப்பீடு தருகிறது பாஜக அரசு!

மாதம் ரூபாய் 5000 ம் ஓய்வூதியம் தந்து, வாரிசு கைகளில் ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரம் தருகிறது பாஜக அரசு!

ஆங்கில மருந்து வகைகளை பாதிக்கும் குறைவான விலையில் மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்வது பாஜக அரசு! இதனால் ஆங்கில மருந்து எடுத்துக்கொள்வோருக்கு மாதம் 500 முதல் 5000 வரை சேமிப்பு ஏற்படுகிறது!

இறுதய அறுவை சிகிழ்ச்சைக்கு பயன்படும் ஸ்டெண்ட் என்னும் பொருளின் விலையை 1.5 லட்சம் முதல் 3 லட்சம் என்றிருந்ததை ரூபாஇ 15000 முதல் 32000 வரை என குறைத்தது பாஜக அரசு!

தமிழகத்தில் 47 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி அம்ருத் நகர் ஆன்மீக நகரம் என உள் கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது பாஜக அரசு!

காவிரி ஆணையம் அமைத்த்து பாஜக அரசு!

 முல்லை பெரியாரின் நீர்மட்டத்தை உயர்த்தியது பாஜக அரசு!

இலங்கையில் தூக்குக்கயிறுக்கு சென்ற மீனவர்களை மீட்டது பாஜக அரசு!

ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு உதவுகிறது பாஜக அரசு!

அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை 50 சதவிகிதம் கூட்டித்தந்து, அங்கன்வாடிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோடிக்கணக்கான நிதியை கொட்டி தமிழக எதிர்கால தலைமுறையை ஊட்டி வளக்கிறது பாஜக அரசு!

இரு கிலோ அரிசிக்கு ரூபாய் 28 ம், ஒரு லிட்டர் மண்ணெண்ணைக்கு ரூபாய் 18.50 ம் மானியம் தந்து, சமையல் எரிவாய்வுக்கும் மாதாமாதம் ரூபாய் 350 முதல் மானியம் தருகிறது பாஜக அரசு!

நவோதயா பள்ளிகளில் இலவச உயர்தர கல்வியை தருகிறது பாஜக அரசு!

தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது பாஜக அரசு!

ரூபாய் 50 லட்சம் 80 லட்சம் இருந்தால்தான் யாராக இருந்தாலும் டாக்டராக முடியும், என்றிருந்த நடைமுறையை, ரூபாய் 4 லட்சம் இருந்தாலே “நீட்” தேர்வில் வெற்றிபெற்றால், ஏழை தொழிலாளி குழந்தைகளும் டாக்டராகலாம் என மாற்றி, ஏழை மருத்துவ புறட்சியை செய்தது பாஜக அரசு!

தாய்மொழி தமிழை பாரதம் முழுமையும் படிக்கச்செய்கிறது பாஜக அரசு!

மொத்தத்தில் இந்தியக்குடும்பங்களின் உயர்வுக்கு உழைக்கிறது பாஜக அரசு!

இதையெல்லாம் ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துச்சொல்ல மாட்டார்கள், ஏனெனில் பாஜக ஊழலை எதிர்க்கிறது!

மக்கள்தான் பாஜகவின் பிரச்சாரப்படையாக விழங்கவேண்டும்!

நன்றி குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...