குறைக்கப்படாத கலால் வரி மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி

தமிழகம், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதானவரி குறைக்க படவில்லை என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

அனைத்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெட்ரோல், டீசல்மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்குவங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப் படவில்லை. இங்கு வரி அதிகமாக உள்ளது.

இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேசியநலன் கருதி வரியை குறைக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, கோவிட் பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்தஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி பேசிய தாவது: கோவிட் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நாம் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும். வயது வந்தோரில் 96 சதவீதம்பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டது, குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்துவருகிறோம்.

பொது இடங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவது முக்கியம். மத்திய மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியால் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...