தாமிரபரணி மகா புஷ்கர விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும்

தாமிர பரணி படித்துறையில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி புஷ்கர விழாவுக்காக தைப்பூச மண்டப படித்துறை பகுதியை சுத்தப்படுத்தும் பணி பாஜ சார்பில் நேற்று நடந்தது. இதில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது: 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிர பரணி புஷ்கர விழாவை சிறப்பாக கொண்டாட மடாதிபதிகள், துறவிகள், கோயில் பிரதிநிதிகள் பெரும்முயற்சி எடுத்து வருகின்றனர்.


பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையுள்ள தீர்த்த கட்டங்களில் புஷ்கர விழா நடக்கிறது. மகா புஷ்கரவிழா, விருச்சிக ராசியில் நடக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் ராசியாகும். எனவே, புஷ்கர விழாவில் பாஜகவினர் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட சேவைகளை கூடுதலாகவழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நெல்லையில் குறுக்குத்துறை, தைப்பூச மண்டப படித்துறைகளில் பாதுகாப்பு கருதி புஷ்கர விழாவை நடத்த அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தடைவிதித்துள்ளது.

தைப்பூச மண்டபத்தில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக உற்சவர் சிலைகள் வைத்து பூஜை செய்வதற்கு அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் நெல்லையப்பர் கோயில் உற்சவர் தைப்பூச தீர்த்தவாரி இங்குதான் நடைபெற்று வருகிறது. நெல்லையில் நடந்த பொருட்காட்சியில் அறநிலையத்துறை சார்பில் நெல்லையப்பர் கோயில் உற்சவர் சிலையை வைத்தது ஆகம விதிமுறை மீறல் இல்லையா? தாமிரபரணி ஆற்றங்கரை மண்டபங்கள் பலகீனமாக உள்ளதாக அறநிலையத் துறை தவறான தகவல்களை தெரிவிக்கிறது. இதுகுறித்து பொதுப் பணித்துறை மூலம் ஆய்வு செய்யப்பட வில்லை. எனவே தமிழக அரசு தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் தாமிரபரணி புஷ்கர விழா நடத்த அனுமதியளிக்க வேண்டும். மேலும் இதனை அரசு விழாவாக நடத்த முன்வருவதோடு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும். மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...