பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அதை முற்றிலும் ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன

பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கர வாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றும் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், இந்தியா – ரஷ்யா நாடுகள் சார்பில் இணைந்து கூட்டறிக்கை வெளியிடப் பட்டது. பயங்கரவாத பிரச்னையில் இரட்டை நிலைப்பாட்டை எந்தவொரு நாடும் கொண்டிருக்க கூடாது. தீவிரவாத அமைப்புகளின் நெட்வொர்க்கை முற்றிலுமாக அழிப்பதுடன், அந்த அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளைக் கண்டிப் பதற்கான முயற்சிகளையும் எடுக்கவேண்டும். 

பயங்கரவாதக் கொள்கை, அது தொடர்பான பிரசாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரசாரங்களையும் முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும். சர்வதேசளவில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த மாநாட்டை ஐ.நா உடனடியாக நடத்தவேண்டும். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தான் தலைமையிலான அமைதி மற்றும் கூட்டுறவு முயற்சிகளை இந்தியாவும் ரஷ்யாவும் ஆதரிப்பது என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை, கல்வி மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, தரையிலிருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய எஸ் – 400 ஏவுகணைகளை இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தமும் இதில் அடங்கும். வர்த்தகம், ரயில்வே, அணு சக்தி மற்றும் குறு, சிறு தொழில்துறையில் இதர ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...