உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தயார்

“உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு அமைதி பேச்சு வார்த்தையிலும் இணைய இந்தியா தயார்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டுநாள் பயணமாக இந்தியாவந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அவரது உரையில் உக்ரைன்போரே முக்கிய இடம் பெற்றிருந்தது. ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக உலகம் அதிகம் பாதிக்கபட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா இடையே தடையற்ற வர்த்தகஒப்பந்தம் ஏற்பட தனிப்பட்ட முறையில் முயற்சிசெய்து அதனை உறுதிப்படுத்த போவதாகவும் ஓலஃப் ஸ்கோல்ஸ் உறுதிஅளித்தார்.

இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”கரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மோதல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வளரும் நாடுகள் எதிர்மறைபாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கூட்டுமுயற்சியின் மூலமாகவே இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பதையும், ஜி20 மாநாட்டில் இதற்கு முக்கியத்துவம் அளிப்பது எனவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தையும் தூதரக அணுகு முறையும் மிகவும் அவசியம் என்பதை இந்தியா தொடக்கம் முதலே கூறிவருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு அமைதி பேச்சு வார்த்தையிலும் இணைய இந்தியா தயாராக இருக்கிறது.

ஐ.நா பாதுகாப்பு அவை சீர்திருத்தப்படவேண்டும். சர்வதேச யதார்த்தத்தை பிரதிபலிக்கக் கூடியதாக சர்வதேச பொதுஅவை இருப்பது மிகவும் முக்கியம். ஜி4 நாடுகளின் கூட்டமைப்பு ஐநா பாதுகாப்பு அவையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருப்பதற்கு ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ் வாழ்த்துதெரிவித்தார். ”மிக கடினமான காலத்தில் ஜி20 தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இதை குறிப்பிட்டுசொல்ல விரும்புகிறேன். அதேநேரத்தில், இந்தியா தனதுபொறுப்பை உணர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். உக்ரைன் போரால், உலகில் எந்த ஒரு நாடும் உணவுக்காகவோ, எரிபொருளுக்காகவோ தவிக்கக் கூடாது.

இந்தியாவில் நிறைய திறைமையான நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவின் திறமையால்பலனடைய நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவின் திறன்மிகு நிறுவனங்களையும், தனிநபர்களையும் ஈர்க்கவே ஜெர்மனி விரும்புகிறது” என ஓலஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...