பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட்

நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தீபாவளிக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. காற்றில் மாசுகலப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாடுமுழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷண் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பட்டாசு வெடிப்பதன்மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பலஆயிரம் குடும்பங்களையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடைவிதிக்க முடியாது.

இருப்பினும் பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசிய மாகிறது. சுற்றுச் சூழலுக்கு அதிகமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்ககூடாது. அதிகசப்தம் மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். லைசென்ஸ் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும். டில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது. 

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் கையிருப்பில் உள்ளதாகவும். கோர்ட் உத்தரவால் விற்பனைதப்பியது என்றும் கூறியுள்ளனர். 

  • பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது.
  • அதிகமாசு, புகை, சத்தம் உள்ள பட்டாசுகளை தயாரிக்க கூடாது.
  • குறிப்பிட்ட அளவிலான சத்தம் உடைய பட்டாசுகளை மட்டுமே விற்கவேண்டும்.
  • அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது  என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
  • அதே போல, இரவு நேரத்தில் பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
  • தீபாவளி போன்ற நாளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே சமயம் தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.