பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட்

நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தீபாவளிக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. காற்றில் மாசுகலப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாடுமுழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷண் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பட்டாசு வெடிப்பதன்மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பலஆயிரம் குடும்பங்களையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடைவிதிக்க முடியாது.

இருப்பினும் பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசிய மாகிறது. சுற்றுச் சூழலுக்கு அதிகமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்ககூடாது. அதிகசப்தம் மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். லைசென்ஸ் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும். டில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது. 

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் கையிருப்பில் உள்ளதாகவும். கோர்ட் உத்தரவால் விற்பனைதப்பியது என்றும் கூறியுள்ளனர். 

  • பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது.
  • அதிகமாசு, புகை, சத்தம் உள்ள பட்டாசுகளை தயாரிக்க கூடாது.
  • குறிப்பிட்ட அளவிலான சத்தம் உடைய பட்டாசுகளை மட்டுமே விற்கவேண்டும்.
  • அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது  என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
  • அதே போல, இரவு நேரத்தில் பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
  • தீபாவளி போன்ற நாளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே சமயம் தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...