பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட்

நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தீபாவளிக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. காற்றில் மாசுகலப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாடுமுழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷண் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பட்டாசு வெடிப்பதன்மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பலஆயிரம் குடும்பங்களையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடைவிதிக்க முடியாது.

இருப்பினும் பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசிய மாகிறது. சுற்றுச் சூழலுக்கு அதிகமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்ககூடாது. அதிகசப்தம் மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். லைசென்ஸ் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும். டில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது. 

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் கையிருப்பில் உள்ளதாகவும். கோர்ட் உத்தரவால் விற்பனைதப்பியது என்றும் கூறியுள்ளனர். 

  • பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது.
  • அதிகமாசு, புகை, சத்தம் உள்ள பட்டாசுகளை தயாரிக்க கூடாது.
  • குறிப்பிட்ட அளவிலான சத்தம் உடைய பட்டாசுகளை மட்டுமே விற்கவேண்டும்.
  • அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது  என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
  • அதே போல, இரவு நேரத்தில் பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
  • தீபாவளி போன்ற நாளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே சமயம் தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...