வாராக்கடன்கள் பெருக முக்கிய காரணம் காங்கிரஸ் அரசே

பெருமளவில் வாராக்கடன்கள் பெருக முக்கியகாரணம், முன்னர் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில், அமித்ஷா, இன்று நாகவுர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பேசியவர்,”காங்கிரஸ் ஆட்சிபுரிந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள் தான், தற்போது வாராக் கடன்களாக உள்ளன. இந்த கடன்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசின்கீழ் வழங்கவில்லை.

இது அப்போதைய காங்கிரஸ் அரசின் மிகப் பெரிய பிழை” என்று குற்றஞ்சாட்டினார். ”ஒரு நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி அப்போது கடனாக வழங்கப்பட்டது. அதற்கு நேருகுடும்பத்தின் மருமகனுக்கு சில மாதங்களில் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு பிகேனர் பகுதியில் 370 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இதுகுறித்து ராகுல்காந்தி பதிலளிப்பாரா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

நிரவ் மோடி, விஜய் மல்லையா குறித்து பேசிய அமித்ஷா,”காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு காங்கிரஸ் அரசுமீது பயமே இல்லை. மோடி அரசு ஆட்சிய மைத்ததும், அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தப்பிச்சென்றனர்” என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...