நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆல்பவர்களை நீதிமன்றத்தை நோக்கி ஓடச் செய்துள்ளோம்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத் தரகர் மைக்கேஸ் கிறிஸ் டியன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் என்னென்ன ரகசியம் வெளிவருமோ என்று  பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார்.

பாலி மாவட்டம், சுமேர்பூரில் பேசும்போது, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மிகமுக்கியப் பிரமுகர்களுக்காக ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்தது. நாங்கள் ஆட்சிக்குவந்ததும் இதை விசாரித்தோம். இதில் குற்றவா ளிகளில் ஒருவரை கைதுசெய்துள்ளோம். இவர் துபாயிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அவர் பேசத்தொடங்கியதும் என்னென்ன ரகசியம் வெளிவரும் என்று யாருக்குத் தெரியும்?” என்றார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரி மதிப்பீட்டை மறு மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இது ராகுல், சோனியா ஆகியோருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும்போது, “நேரு காந்தி குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வழக்கில் அரசு வெற்றிபெற்றுள்ளது. இது நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகும்.

இனி இவர்கள் எப்படி தப்புவார்கள் என நான் பார்க்கிறேன். மக்களே, நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆட்சிசெய்தவர்களை நீதிமன்றத்தை நோக்கி ஓடச் செய்த இந்த தேநீர் விற்பவனின் துணிவை பாருங்கள்” என்றார்.

மோடி மேலும் பேசும்போது, “நாட்டில் சாதியவாதம் என்ற விஷத்தை காங்கிரஸ் பரப்பியது. நகரங்கள் கிராமங்கள் இடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் பாஜக தோல்வி அடையும் என காங்கிரஸ் கட்சியினர் கருதினர். தற்போது உட்கட்சிமோதல் மற்றும் போட்டி வேட்பாளர்கள் காரணமாக ராஜஸ்தானை காங்கிரஸ் இழந்துள்ளதாக கூறுகின்றனர். தோல்விக்கு யாரை காரணமாக்கலாம் என அவர்கள் தேடி வருகின்றனர்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...