உலக சுற்றுலா பொருட்காட்சியில் இந்தியா இரண்டு விருதுகளை வென்றுள்ளது

லண்டனில் நடைபெற்று வரும் உலக சுற்றுலா பொருட்காட்சியில் இந்தியா இரண்டு விருதுகளை வென்றுள்ளது. ‘சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு’ என்ற வகையில் ஒரு விருதினையும், ‘உலகின் சிறந்த சுற்றுலா வாரியம்’ என்பதற்காக மற்றொரு விருதினையும் இந்தியா பெற்றுள்ளது.

லண்டன் எக்ஸல் பொருட்காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உலக சுற்றுலா விருது’ அமைப்பின் தலைவரான கிரஹாம் இ குக்கிடமிருந்து இந்திய சுற்றுலா துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய், இந்த விருதுகளை பெற்றுக் கொண்டார். இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், “அடுத்த ஐந்த ஆண்டுகளில் இந்தியா மேலும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். இவர்களின் வசதிக்காக சுமார் 20 லட்சம் அறைகள் திறன் கொண்ட ஹோட்டல் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வசதி பொது மற்றும் தனியார் துறை கூட்டுடன் ஏற்படுத்தப்படும். அதன் காரணமாக பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் இந்திய சுற்றுலா துறைக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்கப்படும். வறுமை ஒழிப்புக்கு சுற்றுலா துறை மிகவும் பயனுள்ள துறை” என தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 0.6 சதவீதமாக உள்ளது. இதனை 1 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது சஹாய் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.