உலக சுற்றுலா பொருட்காட்சியில் இந்தியா இரண்டு விருதுகளை வென்றுள்ளது

லண்டனில் நடைபெற்று வரும் உலக சுற்றுலா பொருட்காட்சியில் இந்தியா இரண்டு விருதுகளை வென்றுள்ளது. ‘சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு’ என்ற வகையில் ஒரு விருதினையும், ‘உலகின் சிறந்த சுற்றுலா வாரியம்’ என்பதற்காக மற்றொரு விருதினையும் இந்தியா பெற்றுள்ளது.

லண்டன் எக்ஸல் பொருட்காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உலக சுற்றுலா விருது’ அமைப்பின் தலைவரான கிரஹாம் இ குக்கிடமிருந்து இந்திய சுற்றுலா துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய், இந்த விருதுகளை பெற்றுக் கொண்டார். இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், “அடுத்த ஐந்த ஆண்டுகளில் இந்தியா மேலும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். இவர்களின் வசதிக்காக சுமார் 20 லட்சம் அறைகள் திறன் கொண்ட ஹோட்டல் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வசதி பொது மற்றும் தனியார் துறை கூட்டுடன் ஏற்படுத்தப்படும். அதன் காரணமாக பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் இந்திய சுற்றுலா துறைக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்கப்படும். வறுமை ஒழிப்புக்கு சுற்றுலா துறை மிகவும் பயனுள்ள துறை” என தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 0.6 சதவீதமாக உள்ளது. இதனை 1 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது சஹாய் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...