பகத் சிங்கை காப்பாற்ற காந்திஜிக்கு மனமில்லையே … !

1931 மார்ச் 23 ஆம் தேதியன்ற காந்திஜி டெல்லியில் உள்ள டாக்டர் எம்.ஏ. அன்சாரியின் வீட்டில் தங்கியிருந்தார். அன்று அர் மௌன விரதம். அப்போது மதன்மோகன் மாளவியாவும், நேருஜியும் அங்க வந்தார்கள்.

மாளவியா கலக்கத்தோடு "காந்திஜி இன்று மாலையில் பகத் சிங்கையும், அவரது தோழர்களையும் தூக்கிலிடப்

போகிறார்களாம். இனியும் நாம் தாமதிப்பதற்கில்லை. நானும், நீங்களும், பட்டேலும், நேருவும் கையெழுத்திட்டு இங்கிலாந்து தந்தி அனுப்பலாம். உடனே புறப்பட்டுச் சென்று கவர்னர் ஜெனரலைப் பார்த்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சேரலாம். புறப்படுங்கள்" என்றார்.

உடனே காந்திஜி ஒரு பேப்பரில் எழுதி காட்டினார். "நான் செய்யக்கூடியதை எல்லாம் முன்பே செய்து விட்டேன். இனிமேல் ஒன்றுமில்லை. ஆண்டவன் விட்ட வழி" என்று எழுதியிருந்தது.

இதைப் பார்த்தவுடன் நேருஜிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற காந்திஜிக்கு மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டினர்.

கராச்சி காங்கிரஸ் மகாசபை நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு.

அரசியலில் பலாத்காரம் கூடாது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் சேவைகளுக்கு நன்றி செலுத்தி அவர்களது மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் காங்கிரசால் அவர்களின் தீவிரச் செயலை அங்கீகரிக்க முடியவில்லை. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக பேசினார்.

காங்கிரசின் தீர்மானம் எதுவாக இருக்கட்டும், ஆனால் இந்த மாநாட்டுப் பந்தலில் வீற்றிருக்கிற எந்தத் தியாகிகளுக்கும், எந்தத் தலைவர்களுக்கும் அணுவளவும் குறைந்ததல்ல பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் தியாகமும் தேசபக்தியும் அவர்களின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, அவர்களது செயலை அங்கீகரிக்க மறுப்பது என்னால் புரிந்து கொள்ளவில்லை.

காந்திஜி அவர்களே….. நீங்கள் ஒரு பெரிய மகான் என ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பகத்சிங் விஷயத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதத்தை எங்களல் ஜீரணிக்க முடியவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...