தேர்தல் கால நடைமுறை அமலுக்குவந்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திரு விழா காலத்தில் எப்பொழுதும் போல வரையப்படும் “மா கோலத்தில் ”
தாமரைப் பூ வடிவத்தில் இருக்கிறது.
இது பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் கோவில்களில் ஒருகுறிப்பிட்ட சின்னத்திற்கு ஆதரவு கேட்பதுபோல இருக்கிறது .
என்று சொல்லி மூளையை அடகுவைத்த தேர்தல் அதிகாரி அறநிலையத்துறை அதிகாரியை வலுக்கட்டாயப்படுத்தி மனசாட்சியே இல்லாமல் மாகோலத்தை அழித்திருக்கிறார்.
இதற்கு “இந்து தமிழர் கட்சியின் ”சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்து கொள்கிறோம்.
தேர்தல்கால விதிமுறைகள் மதிக்க தகுந்தவைதான் . ஆனால் இதுபோன்று நடப்பதெல்லாம் அறிவீனத்தின் உச்சம்.
இவ்வளவு கண்டிப்பு பேர்வழியாக இருக்கக் கூடிய தேர்தல் அதிகாரிகள் மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வரக் கூடாது என்று மதப்பிரச்சாரம் செய்வதுபோல தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் அங்கு சென்று இந்த மூளையை
அடகு வைத்த அறிவான அதிகாரிகள் என்ன செய்தார்கள்?
தேர்தல் விதி அமலில் இருக்கிறது என்பதற்காக, இனிமேல்
1.திருக்கோவில் இருக்கக் கூடிய தெய்வத் திருமேனிகள் “அபய ஹஸ்தம்” காக்கும்கரம் – கை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இது காங்கிரஸ் சின்னம் துணிவைத்து மூடிவிடுங்கள் என்று கோவில் அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிடுவார்களா?
2.தினசரி பக்தர்கள் கோவிலில் நிற்கக் கூடிய சாமிகளுக்கு தாமரைப் பூ மாலை , தாமரைபூ என்று சாற்றும்போது கூடாது “தாமரை ” பாஜக சின்னம். தாமரைப்பூக்கள் கோவில் வழிபாட்டுக்கு இங்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு செய்வார்களோ?
10 .”செருப்பு” ஒரு கட்சியின் சின்னம் தேர்தல் முடியும்வரை இனிமேல் செருப்பு போடக்கூடாது. என்று சிறப்புச் சட்டம் கூட பிறப்பிப் பார்களோ?
11.”இரட்டை மின்விளக்கு ” இது கூட ஒருசுயேச்சை சின்னம்தான்.
10 மணிக்கு மேல் இரட்டை மின் விளக்கு ஒளிர கூடாது . அப்படி ஒன்று இருந்தால் அது தேர்தல் பிரச்சாரம் ஆகும் என சொல்லி மின்விளக்கு ஒளிர்வதற்கு தடை விதித்து மின்விளக்கை அனைத்து விடுவார்களோ?
பொதுமக்களே காற்று இல்லாமல் செத்து தொலையுங்கள்.
இல்லையென்றால் காடுகளில் கட்டில் போட்டு தூங்கிக் கொள்ளுங்கள் . … என்று உத்தரவு போட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்கமுடியும்.
தேர்தல் பணியாற்றும் தேர்தல் அதிகாரி பெருமக்களே.
இந்துக் கோயில்களில் மட்டும் நீங்கள் வீரம் காட்டாதீர்கள் .
மசூதி சர்ச்களுக்கு சென்று உங்கள் வீரத்தை கொஞ்சம் காட்டுங்களேன்.
~ என்று இந்து தமிழர் கட்சியின் இராம. இரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.