பொன். ராதாகிருஷ்ணன் பிபிசி.,க்கு அளித்த பேட்டி

மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான பேட்டியிலிருந்து சிலபகுதிகளை தொகுத்து அளிக்கிறோம்.

கேள்வி: தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வெற்றிவாய்ப்புகள் எப்படி உள்ளது?

பதில்: நிச்சயமாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அகில இந்திய அளவில் கடந்த முறையை விட இந்தமுறை அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

கேள்வி: 2013 ஆம் ஆண்டு பா.ஜ.கவால் நடத்தப்பட்ட கடல் தாமரை மாநாட்டில் வரும் ஐந்து ஆண்டிற்குள் கச்சத்தீவை மீட்டு எடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கடந்த ஐந்து ஆண்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

பதில்: தமிழக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்தால், இலங்கையில் வசிக்கும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்தால் நாங்கள் அதை திரும்பப்பெற வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என்று கூறினோம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் படுகொலைகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அங்கு இருக்கக் கூடிய மக்கள் தங்கள் தொழில்களை செய்யக்கூடிய சூழ்நிலை அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்காக 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான படகுகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் ஒரு ஆண்டிற்குள் நிரந்தர தீர்வுகிடைக்கும்.

கேள்வி:சென்னையில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அடிப்படையில் கன்னியாகுமரியில் தொழிற்சாலை வர வாய்ப்பு உள்ளதா?

பதில்: இது ஒருசிறிய மாவட்டம், இயற்கை வளம் நிறைந்த மாவட்டம், தொழில் தொடங்ககூடிய அளவுக்கு இடம் கிடையாது. எனவே, அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி ஆகிய தாலுகாக்களில் தொழில்தொடங்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

கேள்வி: நீங்கள் போட்டியிடும் கன்னியாகுமரியில் பாஜகவுக்கு கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் ஆதரவளிக்க என்ன செய்யப்போகிறீர்கள்?

பதில்: கடந்த 37 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பகைமை உணர்வுடன்கூடிய அரசியலை நடத்தி வருகின்றனர். இந்துக்களும், கிறித்தவர்களும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது, கிறித்தவரும் இஸ்லாமியரும் ஒன்று சேர்ந்து விடகூடாது என பகைமை அரசியல் நடத்தி ஆதாயம் தேடிவருகின்றனர். இப்படி வெற்றிபெற்று வரக் கூடிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இவர்களால் அவர்களுக்கு ஆபத்து, அவர்களால் இவர்களுக்கு ஆபத்து என மக்களுக்கு அச்சதை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர்.

இயற்கை அழிந்துபோகும் என்ற புரளியை கிளப்பிவிட்டு இந்த மாவட்டத்து மக்களை மதரீதியான சிந்தனைகளுடன் அடிமைபடுத்தி வைக்க வேண்டும் என்ற சிந்தனையில் பலர்செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் இதற்கு விடிவுகாலம் கிடைக்க வேண்டி இந்த தேர்தலில் முன்னெடுத்து செல்கிறோம்.

கேள்வி: தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல்பாலம் அமைக்கப்படுமா?

பதில்: நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதிபாடிய விஷயம் ‘சிங்களத் தீவிற்க்கு பாலம் அமைப்போம்’ அதனை மக்களும் விரும்புகின்றனர். அந்தநாட்டு அரசாங்கமும் நினைத்தால் நிச்சயம் நடக்கும். இந்தவிஷயத்தில் இரண்டு கையும் சேர்ந்தால்தான் ஓசை வரும். ஆனால், கடல்பாலம் அமைக்கப்பட்டால் இந்திய இலங்கை ஒற்றுமை மிகவும் வலுவடையும்.

கேள்வி: பொன்.ராதா கிருஷ்ணன் எத்தனை ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

பதில்: ஏன் ஆயிரத்தை சொல்கிறீர்கள். குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று களத்தில் உள்ள எனது சகோதரர்கள், கூட்டணிகட்சி சகோதரர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...