வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி. 45 ரக ராக்கெட் …

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி. 45 ரக ராக்கெட் …28 செயற்கைகோளுடன் அது பறந்திருக்கின்றது …

இதில்தான் இந்தியாவின் மாயக்கண்ணான அந்த எமிசாட்டும் இருக்கின்றது …

இந்த எமிசாட்டுக்காகத்தான் அந்த A-SAT செயற்கைகோள் ஏவுகணையினை இந்தியா சோதித்தது …

மிக உயரத்தில் அதை நிலைநிறுத்தும்பொருட்டு இந்திய ராக்கெட் சென்று கொண்டிருக்கின்றது …

விரைவில் நிலை நிறுத்தும் …

28 செயற்கை கோளை சுமந்து செல்வது சாதாரண விஷயமல்ல …

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு கிரையோஜனிக் நுட்பத்தை தரக்கூடாது என தடுத்த அமெரிக்காவின் செயற்கை கோளையும் இந்திய ராக்கெட் சுமந்து செல்கின்றது …

அவ்வகையில் மாபெரும் வெற்றி இது

மாபெரும் சாதனையினை தேசம் செய்திருக்கின்றது அதற்கு பாடுபட்ட விஞ்ஞானிகளை தேசம் வாழ்த்தி வணங்குகின்றது

இந்த செய்தியில் தலைமை விஞ்ஞானி சொல்லியிருக்கும் விஷயங்களை கவனியுங்கள் …

இந்திய ராணுவத்திற்காக‌
436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது …

இது 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது …

இது தவிர லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படுகிறது.

28 செயற்கைக்கோள்களும் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை எமிசாட்டுக்காக வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது …

கவனித்தீர்களா … ?

இந்த எமிசாட்தான் இப்பொழுது துருப்பு சீட்டு 753 கிமீ உயரத்தில் அதை நிறுத்த போகின்றார்கள் …
பல்வேறு வகையான உளவு தகவல்களை அது அனுப்பும் …

இதனை நிச்சயம் உடைக்க எதிரி நாடுகள் விரும்பும் …
அப்படி ஒரு கோள் இயங்க அவை விடாது …

இதனால்தான் எங்களிடமும் சாட்டிலைட்டை நொறுக்கும் ஏவுகணை உண்டு என நிரூபித்து காட்டிவிட்டு எமிசாட்டினை இன்று 1-ஆம் தேதி அனுப்பியது இந்தியா …

எமிசாட் உள்நாட்டு தயாரிப்பு என்றாலும் அதன் நவீன பாகங்கள் நம் தயாரிப்பு அல்ல‌ …

பல வெளிநாடுகளிலிருந்து பெற்ற நுட்பம் மூலம் அட்டகாசமான நவீன கோளை செய்துவிட்டோம் …

இவை எப்படி கிடைத்தன?

சொன்னால் திட்டுவீர்கள் …
ஆனால் அதுதான் உண்மை … #மோடியின் திருத்தபட்ட வெளியுறவு கொள்கையால் சில சக்திகளிடமிருந்து பெறப்பட்ட விஷயம் இது …

சுதந்திர காலத்திற்கு பிறகு இப்போது நாட்டுக்கு எது தேவையோ அதை பெற்றுவிட்டோம் …

ஏப்ரல் 1-ல் எமிசாட் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டபின் அதற்கான பாதுகாப்பினை தற்போது சோதிக்கபட்ட ஏவுகணை A-SAT வழங்கும்

தேசம் பெரும் மைல் கல்லினை எட்டியிருக்கின்றது …

ஜெய்ஹிந்த் !

~ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...