75 வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் என்பது கட்சியின் முடிவு

75 வயதுக்கும் அதிகமானோருக்கு பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
கட்சியின் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். இந்தவிவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி வருகின்றன. 75 வயதுக்கு அதிகமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் என்று கட்சி முடிவு செய்தது.

கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தேன். மக்களுடன் வாழும் ஓர் அரசியல்வாதி நான். என்னுடைய எம்எல்ஏ பதவிக்காலம் நிறைவடைந்த போது மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை. அதனால், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டேன். நான் நாடாளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதை கட்சியும் ஏற்றுக்கொண்டது.

பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கையை பிரதமர் மோடி கடைப்பிடித்து வருகிறார். அந்தக்கொள்கையும் வெற்றிபெற்றது. துல்லியத் தாக்குதல், வான்வழித் தாக்குதல் என பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.

பாலாகோட்டில் நிகழ்த்தப்பட்ட வான் வழித் தாக்குதலில் பாகிஸ்தான் இழப்புகளை எதிர்கொண்டது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும், ராணுவமும் ஒப்புக்கொண்டன .

ராமர் கோயில் விவகாரம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்பின் 370வது பிரிவு ஆகிய விவகாரங்கள் குறித்து தீர்வு காண மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை வேண்டும் .என்றார் அமித் ஷா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...