75 வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் என்பது கட்சியின் முடிவு

75 வயதுக்கும் அதிகமானோருக்கு பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
கட்சியின் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். இந்தவிவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி வருகின்றன. 75 வயதுக்கு அதிகமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் என்று கட்சி முடிவு செய்தது.

கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தேன். மக்களுடன் வாழும் ஓர் அரசியல்வாதி நான். என்னுடைய எம்எல்ஏ பதவிக்காலம் நிறைவடைந்த போது மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை. அதனால், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டேன். நான் நாடாளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதை கட்சியும் ஏற்றுக்கொண்டது.

பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கையை பிரதமர் மோடி கடைப்பிடித்து வருகிறார். அந்தக்கொள்கையும் வெற்றிபெற்றது. துல்லியத் தாக்குதல், வான்வழித் தாக்குதல் என பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.

பாலாகோட்டில் நிகழ்த்தப்பட்ட வான் வழித் தாக்குதலில் பாகிஸ்தான் இழப்புகளை எதிர்கொண்டது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும், ராணுவமும் ஒப்புக்கொண்டன .

ராமர் கோயில் விவகாரம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்பின் 370வது பிரிவு ஆகிய விவகாரங்கள் குறித்து தீர்வு காண மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை வேண்டும் .என்றார் அமித் ஷா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.