நரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார்.

அதிமுகவை அழிக்கப்பார்க்கிறார் ஸ்டாலின் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரமக்குடியில் பிரச்சாரம்செய்தார். அதனையடுத்து ராமநாதபுரம் அரண்மனை முன் நயினார் நாகேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: 2009-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு இருந்தபோது இலங்கையில் போர் நடந்தது. அந்தப்போரில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் இளைஞர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்றனர். இதைத்தடுக்காமல் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ், திமுக.

போரை நிறுத்தக்கோரி அப்போதைய முதல்வர் கருணா நிதி உண்ணாவிரதம் இருந்து நாடகமாடினார். 3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு, போர் முடிவடைந்துவி ட்டதாகத் தெரிவித்தார். ஆனால் போர்தொடர்ந்து நடைபெற்றதால், பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களை மிரட்டி சொத்துகளை எழுதிவாங்குவது, பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் கடைக்காரரை அடிப்பது என ஈவு இரக்கமில்லாமல் நடப்பதுதான் திமுகவினரின் வேலை. பொங்கல்பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1,000 வழங்கினோம். அடுத்ததாக 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் அறிவித்தோம். திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை வழங்கவிடாமல் தடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார். மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி ஏற்பட மோடி பிரதமராக தொடர வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...