நரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார்.

அதிமுகவை அழிக்கப்பார்க்கிறார் ஸ்டாலின் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரமக்குடியில் பிரச்சாரம்செய்தார். அதனையடுத்து ராமநாதபுரம் அரண்மனை முன் நயினார் நாகேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: 2009-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு இருந்தபோது இலங்கையில் போர் நடந்தது. அந்தப்போரில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் இளைஞர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்றனர். இதைத்தடுக்காமல் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ், திமுக.

போரை நிறுத்தக்கோரி அப்போதைய முதல்வர் கருணா நிதி உண்ணாவிரதம் இருந்து நாடகமாடினார். 3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு, போர் முடிவடைந்துவி ட்டதாகத் தெரிவித்தார். ஆனால் போர்தொடர்ந்து நடைபெற்றதால், பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களை மிரட்டி சொத்துகளை எழுதிவாங்குவது, பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் கடைக்காரரை அடிப்பது என ஈவு இரக்கமில்லாமல் நடப்பதுதான் திமுகவினரின் வேலை. பொங்கல்பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1,000 வழங்கினோம். அடுத்ததாக 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் அறிவித்தோம். திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை வழங்கவிடாமல் தடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார். மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி ஏற்பட மோடி பிரதமராக தொடர வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.