நரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார்.

அதிமுகவை அழிக்கப்பார்க்கிறார் ஸ்டாலின் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரமக்குடியில் பிரச்சாரம்செய்தார். அதனையடுத்து ராமநாதபுரம் அரண்மனை முன் நயினார் நாகேந்திரனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: 2009-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு இருந்தபோது இலங்கையில் போர் நடந்தது. அந்தப்போரில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் இளைஞர்கள் கை, கால்களை இழந்து ஊனமுற்றனர். இதைத்தடுக்காமல் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ், திமுக.

போரை நிறுத்தக்கோரி அப்போதைய முதல்வர் கருணா நிதி உண்ணாவிரதம் இருந்து நாடகமாடினார். 3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு, போர் முடிவடைந்துவி ட்டதாகத் தெரிவித்தார். ஆனால் போர்தொடர்ந்து நடைபெற்றதால், பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களை மிரட்டி சொத்துகளை எழுதிவாங்குவது, பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் கடைக்காரரை அடிப்பது என ஈவு இரக்கமில்லாமல் நடப்பதுதான் திமுகவினரின் வேலை. பொங்கல்பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1,000 வழங்கினோம். அடுத்ததாக 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் அறிவித்தோம். திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை வழங்கவிடாமல் தடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார். மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி ஏற்பட மோடி பிரதமராக தொடர வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...