பாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கம் நிறைந்தது

பாஜக தேர்தல் அறிக்கை பல புதிய அம்சங்கள் அறிவிப்புடன் வெளிவந்துள்ளது . முதலில் அதை ‘தேர்தல் அறிக்கை’ என்று கூறாமல், ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழி பத்திரம்) அல்லது ‘தீர்மான ஆவணம்’ என்று கூறலாம் . இதன் சிறப்புகள் குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவாக எடுத்துரைத்தார்.

தேர்தல் அறிக்கை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கானது. அது போல்தான் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும். ஆனால், பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள பெரும் பாலான உறுதி மொழிகள் 2022-ம் ஆண்டு வரைக்கானது. அந்த ஆண்டுதான் இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. 2019-க்குப் பிறகு அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டுதான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாஜக.வின் தேர்தல் அறிக்கையில், 75-வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு 75 இலக்குகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையை இணைத்து பிரதமர் நரேந்திரமோடி 130 கோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி பார்த்தால் பாஜக.வின் அறிக்கை 2047-வது ஆண்டு வரை நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவை கொண்டாடப்படும் வரை பாஜக அறிக்கை உள்ளது.

மோடி கூறும்போது, ‘‘வரும் 2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டை நிறைவுசெய்கிறது. அப்போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் இணைந்து கற்பனை செய்வோம். 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக அடுத்த 5 ஆண்டுகளை மாற்றி அமைக்க பாஜக உறுதிபூண்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

தவிர புதிதாக பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

வழக்கமாக பாஜக.வின் ஒவ்வொரு அறிக்கையிலும் ராமர் கோயில் கட்டுவோம் என்பது இடம்பெறும். தற்போது சபரிமலை விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சபரிமலை தொடர்பான மக்களின் நம்பிக்கை, பாரம்பரியம், வழிபாட்டு சடங்குகளை உறுதிசெய்வதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை மற்றும் சொத்துகள் வாங்க கட்டுப்பாடு விதிக்கும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வது, 60 வயதான சிறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது, மீனவர்களுக்குத் தனித்துறை உருவாக்குதல், 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம், தண்ணீர் மேலாண்மைக்கு தனிஅமைச்சகம், பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க நதிகள் இணைப்பு, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரத்தில் 3-வது பெரியநாடாக இந்தியாவை உருவாக்குவது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் சதவீதத்தை ஒற்றை இலக்கத்துக்குள் குறைப்பது என அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படும் என்று  கூறப்பட்டுள்ளன.

மேலும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி, 2022-ம் ஆண்டுக்குள் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, கங்கை நதியை முழுவதுமாக தூய்மைப்படுத்துவது, 2024-ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் மின்மய மாக்குவது, 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பது, 100 புதிய விமான நிலையங்கள், 400 அதி நவீன ரயில் நிலையங்கள் உருவாக்குதல், உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடி முதலீடுசெய்வது உட்பட பல புதியவாக்குறுதிகளை பாஜக வழங்கி உள்ளது.

மேலும், வெளியுறவுத்துறை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தப் பிராந்தியத்திலேயே முதல் முறையாக ‘வெளியுறவு கொள்கை பல்கலைக் கழகம்’ தொடங்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.