மக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாயகம் கேளிக்கூத்துதான்!

மக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள்! மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை! பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள்! அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்!

பெரும்பாலான மக்கள் தவறான முடிவு, தவறாண எண்ணங்களின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள்!

சிலர் சிந்தனைக்கு சீல் வைத்திருக்கிறார்கள்!

இந்த சின்னத்திற்குத்தான் வாக்களிப்பேன் என்கிறார்கள்!

சிலர் இவன் புதிது இவனுக்கு குடுத்துப்பார்க்கிறேன் என்கிறார்கள்!

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான், சினிமாக்காரன் நல்லவன் என்றெல்லாம் யோசிக்கிறார்கள்!

எது நடந்தாலும் அது தானாக நடந்தது அதற்கு அரசியலும் அரசும் காரணமில்லை என்று நினைக்கிறார்கள்!

பலருக்கு மாநிலம், தேசம், சட்டம், திட்டம் என்பதெல்லாம் என்னவென்றே தெரியவில்லை!

சிலர் தங்களின் கட்சிகளின் வெறியர்களாக இருக்கிறார்கள்!

சிலர் சிலருக்கு அடிமைகளாக இருக்கவே விரும்புகிறார்கள்!

பலரிடம் சுயநலத்தைவிட வேறு எதுவுமே இல்லை!

நான் மேலே சொன்ன விசயம் MBBS, IAS போன்ற உயர் படிப்பு படித்தவர்களுக்கும் பொருந்தும், இன்றைய படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லை!

பெரும்பாலானவர்கள் லஞ்சம் கொடுப்பவர்களாக லஞ்சம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள்! அதே சமயம் லஞ்சத்திற்கு எதிராக பேசுவார்கள்! ஆனால் ஓட்டு போடும்போது லஞ்சத்தை ஆதரித்தே வாக்களிக்கிறார்கள்!

மக்கள் அனைவரும் நேர்மையாளர்களாக, அறிவாளிகளாக மாறாதவரை, ஜனநாயகம் கேளிக்கூத்துதான்!

எனவேதான் புகளுக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் பலர் அரசியலுக்கு வருகிறார்கள்!

என்னிடம் கோடானுகோடி பணம் இருந்தால் நான் இந்திய அரசியலில் ஒரு முக்கிய தலைவராக மாற முடியும்! நான் நல்லவனாக, தேசப் பக்தனாக, அறிவாளியாக இருந்து அந்த பணம் என்னிடம் இல்லை என்றால் என் அறிக்கை ஒரு துண்டு நோட்டீசில்கூட இடம்பெறாது!

தேசநலனில் அக்கரை உள்ளவர்கள், மக்களை அறிவாளிகளாக நல்லவர்களாக தேசப்பக்தர்களாக மாற்றுங்கள்!

இதுவே இன்றைய தேசியப்பணி!

இது பத்துநாள் பதினைந்துநாள் செய்யக்கூடிய பணியல்ல, இது ஆண்டு முழுமையும் ஆயுள் முழுமையும் செய்யவேண்டியப் பணி!

– தாயகப்பணியில் குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...