ராம நாமத்தை பாகிஸ்தானில உச்சரிக்க முடியும்?

ராம நாமத்தை இந்தியாவில் உச்சரிக்காமல், பாகிஸ்தானிலா எழுப்ப முடியும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், மேற்குவங்கத்தில் மம்தாவின் வாகன அணிவகுப்பு சென்றபோது, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட மூன்றுபேரை காவல் துறையினர் பிடித்துச் சென்றனர். இதனைக் குறிப்பிட்டு தேர்தல் பிரசாரத்தில் மம்தாவை விமர்சித்த மோடி, மேற்குவங்கத்தில் மத வழிபாடுகள், பூஜைகளை மேற்கொள்வதற்குகூட மக்கள் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்று உச்சரிப்பவர்கள், சிறையில் தள்ளப்படுகின்றனர். நான் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷ மிடுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்றார்.

மேற்கு வங்கத்தின் கட்டால் பகுதியில் செவ்வாய் கிழமை பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
ராமபிரான் இந்திய கலாசாரத்தில் ஓர் அங்கம். அவரதுபெயரை உச்சரிப்பதை நாட்டிலும் யாரும் தடுத்துவிட முடியாது. மம்தாவுக்கு நான் ஒருகேள்வி கேட்க விரும்புகிறேன். ராம நாமத்தை இந்தியாவில் உச்சரிக்காமல், பாகிஸ்தானுக்குச் சென்றா உச்சரிக்க முடியும்? மேற்கு வங்கம் இந்தியாவில்தானே இருக்கிறது.

மக்களவைத் தேர்தல் முடிவு வரும்நாளில் மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும். இங்குள்ள 42 தொகுதிகளில் 23 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெறுவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கு வங்கத்துக்கு ரூ.4 லட்சத்து 24 ஆயிரத்து 800 கோடி நிதியுதவி அளித்துள்ளது. ஆனால், இந்த உதவிகள் மக்களைச் சென்றடைய வில்லை. அதற்கு பதிலாக எங்குசென்றதை என்பது குறித்து மாநில முதல்வரிடம்தான் விசாரிக்க வேண்டும். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரம்கோடி மட்டுமே அளித்தது.

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக பலர் மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ளனர். அவர்களைக் கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் நடத்தப்படும் என்று அமித்ஷா பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.