டைம்’ செய்தி இதழ் கட்டுரை பின்னணியில் பாகிஸ்தான்

பிளவுவாதிகள் தலைவர் என்று, பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் ‘டைம்’ செய்தி இதழ் குறிப்பிட்டு, அட்டை படக் கட்டுரை வெளியிட்டுள்ளதன், பின்னணியில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் இருப்பது தெரியவந்துள்ளது.

டைம் இதழில் பிரதமர் நரேந்திரமோடி அட்டைப்படத்துடன் பிளவு வாதிகளின் தலைவர், என்ற தலைப்பில் வெளியான செய்திகட்டுரை இந்திய அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது.

இந்தியாவில் சிறுபான்மையினர் நலன்கள் மோடி ஆட்சியில் பாதிக்கப் பட்டதாகவும், மாநில சுயாட்சி நசுக்க பட்டதாகவும், அந்த கட்டுரையில் குற்றஞ்சாட்ட பட்டிருந்தது. இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித்பத்ரா இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தகட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஆதிஷ்தஷீர் என்பவர், பாகிஸ்தானை சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறுமாதிரியான கட்டுரையை நாம் எதிர்பார்க்க முடியாது.

 

மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான்தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன்சிங் ஆகியோரின் மகன்தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர். மோடி அரசின்கீழ் இந்தியா புதுப்பொலிவு பெற்றுள்ளது. சீரமைப்பு செயல்பாடு போன்றவை மோடி ஆட்சியில் உறுதி செய்யபட்டுள்ளன. மணப்பெண் கையில் உள்ள வளையலைப் போலதான், மோடியும், வேலை பார்ப்பது போன்ற சத்தம்வருகிறது, ஆனால், வேலை நடப்பதில்லை என காங்கிரஸின் நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார். இது காங்கிரசின் மனநிலையை காட்டுகிறது. இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...