மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம்

புதிதாக அமையவிருக்கும் மத்திய அமைச்சரவையில் தனக்கு எந்தபதவியும் வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த  அருண்ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அருண் ஜேட்லி, தான் எழுதிய கடிதத்தின் நகலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் எனக்கு இடம் கொடுத்தது மிகப்பெரிய கௌரவத்தையும், பல நல்ல அனுபவங் களையும் கொடுத்தது.

ஆனால் கடந்த 18 மாதகாலமாக எனக்கு மிகமோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறேன். தற்போதிருக்கும் பொறுப்புகளை எல்லாம் உங்களிடம் வாய் மொழியாக ஒப்படைத்து விட்டேன்.

பொறுப்புகளில் இருந்து இனி விலகி இருக்கவே விரும்பு கிறேன். இதன் மூலம் எனது உடல்நலம் மற்றும் சிகிச்சைக்காக எனது நேரத்தை செலவிடமுடியும். உங்கள் தலைமையால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எப்போதும் நான் எனதுஆதரவை அளிப்பேன்.

இந்தகடிதத்தின் மூலம், புதிய மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட வேண்டாம் என்பதை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அருண்ஜேட்லி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...