முயற்சியை கைவீடாதீர்கள் ஃப்ரண்ட்ஸ்

நீட்.. தமிழக மாணவர்களின் மருத்துவகனவை பறிக்க வந்ததுஎன்று எதிர் காட்சிகள் போய் பிரச்சாம் செய்துவரும் நிலையில்.. ஏழை எளிய மாணவர்களும் இலவசமாக எளிமையாக மருத்துக்கனவை நனவாக்க கொண்டு வரப்பட்டுள்ள அறிய திட்டம் என்று மக்களே பார்க்கும் ஒரு சூழல் உருவாகி வருகிறது.

2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதில் 59 ஆயிரத்து 785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நேற்றைய தினம் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 ஆம் வகுப்பு தேர்வில் 2 மாணவிகளும் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் மருத்துவ கனவு பறிபோகிவிட்டதாக எண்ணி அவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் மாணவர்கள் ஒருவிஷயத்தை நன்கு மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே. இதை மனதில் கொண்டு நீட் தேர்வில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் சாதித்து காட்டிருக்கிறார் மாற்றுத்திறனாளி மாணவன் கார்வண்ண பிரபு.

நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகளவில் முதல் இடத்தையும், அகில இந்தியஅளவில் 5-வது இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ள கார்வண்ண பிரபு கரூர் மாவட்டதை சேர்ந்தவர். பிரபுவின் தந்தை ஒருமருத்துவர். தனது தந்தை போல தானும் மருத்துவராக வேண்டும் என்ற வெறியுடன் படித்திருக்கிறார் மாணவன் பிரபு. ’

பிளஸ் டூ தேர்வில் 00-க்கு 476 மதிப்பெண் பெற்ற பிரபு, நீட்தேர்வுக்காக தினமும் 4 மணி நேரம் செலவழித்திருக்கிறார். இவர் நீட் தேர்வுக்கு தனியார் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு எல்லாம் செல்லவில்லை. கடந்த 2 வருடமாக நீட்தேர்வாக தொடர்ந்து பள்ளியில் சிறப்பு வகுப்பில் படித்திருக்கிறார்.

பிரபுவின் இந்த சாதனையை எண்ணி அவரின் பள்ளி மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தன்னால் எப்படி சாதிக்கமுடிந்தது என்பதை குறித்து பிரபு பகிர்ந்திருப்பதாவது, “என் பெற்றோர்கள் இல்லையென்றால் என்னால் இதை கட்டாயம் சாதித்திருக்க முடியாது. 2 வருடம் இதற்காக கடுமையாக உழைத்தேன்.

என்னால் சாதிக்க முடிந்தது என்றால் என்னை போன்ற மற்ற மாணவர்களாலும் இதை கட்டாயம் சாதித்துக்காட்ட முடியும். தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர்கள் தற்கொலை என்ற செய்திகளை என் பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. முயற்சியை கைவீடாதீர்கள் ஃப்ரண்ட்ஸ் அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே” என்று கூறியுள்ளார்.

பிரபுவின் இந்த பதில், அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...