ஈழ விவகாரத்தில் எது தர்மமோ? அதை மிக சரியாக செய்வார் மோடி

மிகமுக்கிய செய்தியினை பெட்டி செய்தியாக கூட போட மன மில்லாமல் மறைக்கின்றன தமிழக மீடியாக்கள்

ஒரு டிவியிலும் அதுபற்றி விவாதமில்லை, செய்தியில்லை ஏன் ஒரு வார்த்தையுமில்லை, ஆம், இலங்கையில் மிகபெரும் காரியத்தை செய்யும் முகமாக காய்களை நகர்த்துகின்றார் மோடி

இலங்கை தமிழர் சிக்கலுக்கு அந்நாட்டு 13ம் பிரிவு சட்டத்தில் திருத்தம் செய்யபட வேண்டும் என வாய் மொழியாக பேசதொடங்கிய காலத்தில் கொல்லபட்டார் இந்திரா

ராஜிவ்காந்தி முரண்டு பிடித்த ஜெயவர்த்தனவேவினை மிரட்டி அழைத்து வந்து அந்த 13ம் சட்ட பிரிவுஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார் ராஜிவ்காந்தி

சிங்களம் அதை எதிர்த்து கொதித்தது, பிரபாகரனும் அதையே செய்தார்

பிரபாகரனை தூண்டிவிட்ட பிரேமதாசா அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய சொன்னான், அதைவிட அதிகம் தருவதாக ஆசைகாட்டினான்

பிரபாகரனும் அதை நம்பி இந்திய படைகளுடன்  மோதினார். அத்தோடு 32 ஆண்டுகாலமாக யாரும் அந்த ஒப்பந்தம் பற்றி பேசவில்லை, ஏன் பலருக்கு மறந்தே போயிற்று. தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கும் அதேமறதி

அந்த சட்டதிருத்தம் தனி நாடு அனுமதிக்காது ஆனால் பல உரிமைகளுக்கு வழி செய்யும். ராஜிவுக்குபின் வந்த பிரதமர்கள் யாரும் அதை தொடவில்லை. ஆனால் மோடி இரும்பு மனிதர் அல்லவா?, நாட்டுக்கு எதுதேவை, எதை செய்தால் என்ன பலன் என்பதை மிக கவனித்து செய்யும் ஆற்றலுள்ள பிரதமர் அல்லவா?

அவர் அந்த விவகாரத்தை தூசு தட்டி எடுக்கின்றார்.

13ம் சட்டதிருத்தத்தை மோடி இலங்கைக்கு அழுத்தம்கொடுத்து தீர்க்க வாய்பிருப்பதாக உலகம் கருதுகின்றது

இலங்கை தமிழ் தலைவர்களை தன்னை வந்து சந்திக்க அழைப்பு விடுத்திருக்கின்றார் என்பது உலகம் கவனிக்கும் செய்தி

1984ல் இந்திரா காலத்தில் அமிர்தலிங்கத்தை அழைத்தபின் மோடிதான் அதை செய்கின்றார்

சிங்களம் ஆடிபோய் இருக்கின்றது, இலங்கையில் பொட்டுவெடி வெடித்தாலும் பொங்கும் தமிழக ஊடகங்களும், அரசியல் இம்சைகளும் இப்பொழுது மாபெரும் அமைதி

இலங்கை தமிழருக்கு நல்ல தீர்வு கிடைப்பது இவர்களுக்கு விருப்பமா என்றால் இல்லை, நிச்சயம் இல்லை

ஆனால் இவர்களால் தீர்வு கொடுக்கமுடியுமா என்றால் அது சுத்தமாக முடியாது

தீர்வினை மத்திய அரசு ஒன்றாலே கொடுக்கமுடியும், அவ்வகையில் மோடியிடமே அதிகாரம் இருக்கின்றது, இனி தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் என்ன செய்யும் தெரியுமா? இதெல்லாம் வேண்டாம் தனிஈழம் பிரித்துகொடு என சொல்லி மக்களை குழப்பியடிப்பார்கள்

நிச்சயம் செய்வார்கள் இவர்களுக்கு எந்த சிக்கலும் தீரவே கூடாது என்பதில் அக்கறை அதிகம்.. அப்படி இவர்கள் தனிநாடே தீர்வு என கிளம்புவார்களாயின் இவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு இலங்கை காரியத்தை நோக்கலாம்

மாபெரும் ஈழதீர்வினை நோக்கி மோடி நகரும்நேரம் தமிழகத்தில் ஒருகுரல் ஆதரவில்லை, ஒருபத்திரிகை செய்தியில்லை , ஒரு அரசியல்வாதி சத்தமில்லை

இவர்களின் கள்ளதனத்தையும், திருட்டு அரசியலையும் கண்டு நாணத்தால் தலை குனிகின்றோம், இவர்களால் தமிழகத்துக்கு ஒருநன்மையும் கொண்டுவர முடியாது அதற்கு இவர்கள் விரும்பகூட இல்லை எனும்பொழுது ஆத்திரத்தில் மனம் கசக்கின்றோம்

வராது வந்த மாமணியாக வந்தபெருமான் மோடி, இதுவரை யாரும் 32 வருடமாக தொடாத அந்த சிக்கலை ஈழதமிழருக்காக தொடுவது வாழ்த்துகுரியது

ஈழமக்களுக்கு ஏதும் நல்லது செய்யவேண்டும் என்ற மனமுள்ளவர்கள் இப்பொழுது மோடியினை நோக்கி வணங்குகின்றார்கள்..

எதுசாத்தியமோ? எது நீதியோ? எது தர்மமோ? அதை மிக சரியாக ஈழ விவகாரத்தில் செய்கின்றார் மோடி

வாழ்க நீ எம்மான்

“நீ செல்லும் இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறும்…தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர்தூவும்.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...