யோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி

யோகாசனத்துக்கு சர்வதேசளவில் புகழைப்பெற்றுத் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் வெள்ளிக்கிழமை அந்த மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்று யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் என்ற அறிவிப்பை கடந்த 2014 டிசம்பர் 11-ஆம் தேதியன்று ஐ.நா. அறிவித்தது. இதற்கானயோசனை அளித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவின் பாரம்பரியமான யோகாவின் மூலம் சர்வதேச சமுதாயம் பயனடையவேண்டும் என்ற நோக்கில் மோடி மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிகிடைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் யோகாவுக்கு பெரும் புகழை மோடி பெற்றுத்தந்துள்ளார். இதன்மூலம் நமது கலாசாரத்தின் பெருமையை உலகம் உணர்ந்துள்ளது. யோகா மூலம் ஒட்டுமொத்த உலகமே இந்தியாவின் பக்கம் ஈர்க்கப் பட்டுள்ளது.

யோகா செய்வதால் என்ன கிடைத்துவிட போகிறது என்று இப்போது சிலர் கேள்வி எழுப்பு கின்றனர். இந்த நாளில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக் கணக்கான மக்கள் இணைந்து யோகாசன பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகமக்களை ஒன்றிணைக்கும் கருவியாக நமது யோகா உயர்த்தப் பட்டுள்ளது. கோடிக் கணக்கான மக்கள் யோகாசனத்தை தங்கள் வாழ்வின் ஒருபகுதியாக மாற்றி கொண்டுள்ளனர். யோகாவின் நன்மையை அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளதே இதற்குக்காரணம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதுக்களும், முனிவர்களும் மட்டுமே யோகாசன பயிற்சி செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. பிற்காலத்தில் அதன் நன்மையை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் யோகாவில் ஈடுபட்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டில்தான் யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

சர்வதேச யோகாதினத்தை ஐ.நா. மூலம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்த 70 நாள்களில் 177 நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டன. அதன் விளைவாக இப்போது உலகம் முழுவதும் யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. இதனை சாமானிய மக்களுக்கும் கொண்டுசெல்லும் பணியில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனம், உடல் நலனைக் காக்க யோகாவைப் போன்ற சிறந்தகருவி வேறு எதுவும் இல்லை என்றார் அமித் ஷா.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...