அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரகமந்திரம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல்செய்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது,
கடந்த ஐந்து ஆண்டுகளில் 657 கி.மீட்டர் அளவுக்கு மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. உதான் திட்டம் மூலம் சிறியநகரங்களுக்கும் குறைந்த விலையில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சரக்குப் போக்கு வரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்.ஒரு நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டுவரப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறுவியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
2030ம் ஆண்டுக்குள் ரயில்வேதுறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுசெய்ய நடவடிக்கை.நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுக்கு 20 லட்சம்கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது.
அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பது தான் மத்திய அரசின் தாரகமந்திரம் என்று அறிவித்தார்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |