பாகிஸ்தானை உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்புஅளித்துள்ளது.
ஈரானிலிருந்து சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, இந்தியாவுக்காக உளவுபார்த்ததாக குல்பூஷண் ஜாதவை அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கைதுசெய்தனர். இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத்தொடுத்தது. ஈரானிலிருந்த பாகிஸ்தான் கடத்திவந்து கைது செய்ததாக இந்தியா குற்றஞ்சாட்டியது. இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்ற இடைக்காலத்தடை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.
பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் 4 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் செயல்பாடு சந்தேகத்துக் கிடமான வகையில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய இந்தியா, அந்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என வாதிட்டது.
இந்நிலையில், மூத்த நீதிபதி அப்துல்லாவி அகமது யூசுப், இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |