தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிடில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும்

தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிடில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை இரவு தரிசனம் செய்யவந்த பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், ஆளும்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கட்சியிலிருந்து ஒவ்வொருவராக வெளியே செல்கின்றனர். கர்நாடகத்திலும், மற்ற மாநிலங்களிலும் யாரையும் இழுக்கவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது. தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லையென்றால் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். தமிழகத்துக்கு எந்தத்திட்டமும் வரக்கூடாது என்றால் தமிழகம் எப்படி முன்னேற முடியும்? சிலதிட்டங்கள் மீது கருத்துவேறுபாடு இருந்தால் கேட்டு விளக்கம் பெறலாம்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் மத்திய அமைச்சர்கள் கொண்டுவரவில்லை. மத்திய நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சிதம்பரம் எந்த திட்டத்தையும் கேட்டுப்பெறவில்லை. தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்களை அடையாளம் காண வேண்டியது இன்றைய காலகட்டமாகும்.

கடந்த 5 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  அரசு தமிழகத்துக்கு எல்லா துறைகளிலும் என்னென்ன திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது என்பதை பட்டியலிடத் தயாராக இருக்கிறேன். திமுக- காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியைவிட பிரதமர் நரேந்திர மோடி அரசு அதிகப்படியான நிதியை தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும். தனியார் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களை அரசுப் பள்ளிகளிலும் கற்றுத்தர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுக்கோள் என்றார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...