இந்தியாவிடம் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது அமெரிக்கா

அதிநவீன ஆயுதங்கள்கொண்ட, போரில் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அம்சம்கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக 4 ஹெலிகாப்டர்களை ஒப்பந்தப்படி இந்திய விமானப் படையிடம் அமெரிக்க போயிங் நிறுவனம் இன்று சனிக்கிழமை (ஜூலை 27) ஒப்படைத்தது.

இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து, அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் 22 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழு த்தானது.

அதனடிப்படையில், போயிங் நிறுவனத்தின் அரிசோனாவில் உள்ள தொழிற் சாலையில் தயாரிக்கப்படும் அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களில் ஒரே ஒருஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப்படையிடம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து ஏர் மார்ஷல் புட்டோலா பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 4 ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அமெரிக்காவில் இருந்து அண்டானோவ் ஏஎன்224 விமானத்தின் மூலம் 4 அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்பட்டு உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஹிண்டன் விமானப்படைதளத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று சனிக்கிழமை (ஜூலை 27) முதற்கட்டமாக 4 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்த அமெரிக்கபோயிங் நிறுவனம், அடுத்தவாரத்தில் கூடுதலாக 4 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும். 2020 ஆம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இவை உரிய சோதனைக்குப்பிறகு, பதான்கோட் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, முறைப்படி இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என தெரிகிறது

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...