குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு  வெற்றி

கர்நாடக சட்டப் பேரவையில் தமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சித்தராமையா மற்றும் குமாரசாமி முதலமைச்சர்களாக இருந்தபோது பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை என்றும், நிர்வாகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில், தானும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடபோவதில்லை எனவும் கூறிய எடியூரப்பா, மறப்போம் மன்னிப்போம் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும், தம்மை எதிர்ப்பவர்களையும் அன்புசெய்வதாகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா  ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எடியூரப்பா கூறினார்.

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கவிரும்புவதாக தெரிவித்த எடியூரப்பா, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீ​ழ் 2 தவணையாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். அனைவரும் இணைந்து செயல்படலாம் என அழைப்புவிடுத்த எடியூரப்பா, தமது அரசு மீது அனைவரும் நம்பிக்கை தெரிவித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும்  குமாரசாமி ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குரல்வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு  வெற்றி பெற்றதாக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தெரிவித்தார். பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...