குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு  வெற்றி

கர்நாடக சட்டப் பேரவையில் தமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சித்தராமையா மற்றும் குமாரசாமி முதலமைச்சர்களாக இருந்தபோது பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை என்றும், நிர்வாகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில், தானும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடபோவதில்லை எனவும் கூறிய எடியூரப்பா, மறப்போம் மன்னிப்போம் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும், தம்மை எதிர்ப்பவர்களையும் அன்புசெய்வதாகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா  ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எடியூரப்பா கூறினார்.

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கவிரும்புவதாக தெரிவித்த எடியூரப்பா, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீ​ழ் 2 தவணையாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். அனைவரும் இணைந்து செயல்படலாம் என அழைப்புவிடுத்த எடியூரப்பா, தமது அரசு மீது அனைவரும் நம்பிக்கை தெரிவித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும்  குமாரசாமி ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குரல்வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு  வெற்றி பெற்றதாக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தெரிவித்தார். பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...