பாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் வேளையில், அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின்படி அனைவரையும் உடனடியாக காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவம் எச்சரித்தது.

இதனைத்தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிநுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டுவீழ்த்தினர். இதில் பாக். கமாண்டோவைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

ஜூலை 31-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப்பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 36 மணிநேரத்தில் இந்தபோக்கு தீவிரமடைந் துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் மூலம் பயங்கர வாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 7 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுட்டுவீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்துவருவதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தானின் முத்திரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...