முஸ்லீம்களை திசைத்திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ளார் ராமகோபாலன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவின் பேச்சுக்கு இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

அயோத்தி-ராமர் கோயில் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், முஸ்லீம்களிடத்தில் காணும் அமைதி என்பது புயலுக்கு முன் அமைதி என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகதின் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நல்லகண்ணு பேசியுள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ராம கோபாலன் இது கம்யூனிஸத்தின் உண்மை சொரூபத்தை காட்டுகின்றது” என கூறியிருக்கிறார்,

கடந்த அறுபது ஆண்டுகளாக இந்த வழக்கு-நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கை விசாரித்த-நீதிபதிகளில் ஒருவர் முஸ்லீம். தொல்பொருள், தொல்லியல், ஆவணங்கலை சரிபார்க்கும் அனைத்து பிரிவுகளிலும் முஸ்லீம்கள் 40% இடம்பெற்றுள்ளனர் . அனைத்து சாட்சிகளையும் தீவிரமாக விசாரித்து ஆதாரங்களின் அடிப்படையில் அந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று அலகாபாத் உயர்-நீதிமன்றம் தீர்ப்பு-வழங்கியுள்ளது.

நீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது என நல்லகண்ணு கூறியுள்ளது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முஸ்லீம்களை திசைத்திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ளார். நீதிமன்றம் சொல்வதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என இதுவரைக்கும் பேசிவந்தவர் இன்று தனது நிலையை மாற்றி கொண்டிருக்கிறார்” என ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...