நாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம்லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்ட பின்னர், பிரதமர் மோடியின் பேச்சு, பொதுமக்களின் ஆதரவு, விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சந்திரயான்- 2 விண்கலத்தின் விக்ரம்லேண்டர் நேற்று(செப்.,7) அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால், லேண்டர், நிலவின்தரையில் இருந்து 2.1 கி.மீ.,தூரத்தில் இருந்த போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து காலை இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ””சந்திரயான் – 2 திட்டத்தின் வெற்றியில் இடையூறு ஏற்பட்டுள்ளதால், ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் மனம் உடைந்து விடக் கூடாது. புதிய விடியல், சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” என்றார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். காரில் ஏறுவதற்கு முன்பாக, இஸ்ரோ தலைவர், சிவனிடம், திரும்பி ஆறுதல்வார்த்தைகளை கூறினார்.அப்போது உணர்ச்சிவசப்பட்ட, சிவன், கண்ணீர் விடுவதைப் பார்த்த, பிரதமர் மோடி, அவரைக் ஆரத்தழுவி தோள்களை தடவி விட்டு, ஆறுதல் கூறினார். பிரதமரின் தோள்களில் முகத்தை புதைத்துக் கொண்டு, சிவன் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பிரதமர் மோடியின் பேச்சும், தேசத்தின் ஆதரவும் எங்களுக்கு மகிழ்ச்சியைகொடுத்தது. இது விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்தது. என்றார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் கூறுகையில், உற்சாகபடுத்தியும், இஸ்ரோவுக்கும் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஆதரவுதெரிவித்து பிரதமர் பேசியது பாராட்டுக்குரியது. இது எங்களை நெகிழசெய்துள்ளது. நாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது. பிரதமர் தனது பேசியவிதம் பாராட்டுக்குரியது. அவரது பேச்சு, உணர்ச்சிகரமாகவும், ஆழமான அர்த்தங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இதைவிட சிறந்த ஒன்றை நாம் எதிர்பார்க்க முடியாது. என்றார்.

இஸ்ரோவின் மற்றொரு முன்னாள்தலைவர் ஏஎஸ் கிரண் குமார் கூறுகையில், தேசத்திற்கும், பிரதமருக்கும் நாங்கள் கடமைப் பட்டுள்ளோம். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில், பல சிக்கல்கள் இருந்தன. இதனை புரிந்துகொண்டு, ஆதரவு அளித்த நாட்டிற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஒட்டுமொத்த நாட்டிற்கும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...