மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி குறும்படம் வெளியிட்டார். தலை நகர் தில்லியில் சனிக் கிழமை மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியை சிறப்பிக்கும் விதமாக குறும் படம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், கங்கனா ரணாவத், சோனம் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், போனி கபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அதில் பேசியதாவது,
மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்த அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அவருடைய போதனைகளை பரப்புவதில் திரைத் துறை பெரும்பங்காற்றி வருகிறது. 1947 வரையிலான சுதந்திரப் போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |