அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி

அயோத்தி வழக்கில் சர்ச்சைகுரிய  நிலம் யாருக்குசொந்தம் என்ற விவகராத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதிதந்துள்ளது. இதில்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அரசின் வசம் இருக்க வேண்டும் என்றும், 3 மாதத்துக்குள் மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளையை நிறுவ வேண்டும், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

ஒருமதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமையகூடாது. வரலாறு, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது இந்தவழக்கு. மதசார்பின்மையே அரசியலமைப்பின் அடிப்படைபண்பு. பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம். அதேசமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை.

நீதிமன்றம் நடுநிலைகாக்கும் நிலையில் உள்ளது. இந்தவழக்கில் நடுநிலை காக்கப்படும். அமைதியை காக்கும்விதத்தில், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்குஇருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12 -16 ம் நூற்றாண்டிற்குள் சர்ச்சைக்குரிய இடத்தில் என்னஇருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை. ராமர் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.

சட்டத்தின் அடிப்படையில்தான் நிலத்திற்கு உரிமைகோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது. இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம்உள்ளது. வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோரமுடியாது.

மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை சுப்ரீம்கோர்ட் மதிக்கிறது. சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கம்வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆங்கியர் வருகைக்குமுன்பே அயோத்தியில் இந்துக்கள் ராமர் – சீதையை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டு மொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோரமுடியாது. பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. பாபர்மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை. 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறிய செயல்.

இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப் பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி வழக்கு தள்ளுபடி. நிலத்திற்கு உரிமைகோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்ககூடியது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம்.
இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம்வழங்க வேண்டும். அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்கவேண்டும். நிலத்தை பராமரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். நிலத்தை மூன்றாக பிரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவு செல்லாது. சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும்.

அயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படும். அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...