மார்கழி மாதத்தின் மகத்துவம்

"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் ",இது மார்கழி மாதம் ,ஆண்டாள் பாவை நோன்பு தொடங்கிய தினம் பௌர்ணமி என்பதால் 'மதி நிறைந்த நன்னாளாம் '.என்று ஆண்டாள் பாடியசிறப்பு மிக்க மாதம்.

 

மார்கழி மாதம் பூஜை ,பஜனை என்று தெய்வீகம் கமழும் மாதம் இது. இந்த மாதம் தெய்வத்திற்குரிய மாதம் என்று மக்களால் கொண்டப்படுக்கிறது. இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு பூஜை,பஜனை,வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் , உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். வடக்கு நோக்கிப்போகும் ஆறு திங்களைத் தட்சணாயனம் எனவும் வழங்குகிறது.வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம்உத்தராயணமே பகற்காலம்.தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.தேவர்களின் மாதமான இந்த மாதம் பொழுது விடிவதற்கு முந்தைய நேரத்தை 'பிரம்ம முகுர்த்தம் 'என்றும் ,'உஷத் காலம் 'என்றும் சொல்கிறோம்.

இவ்வாறு தேவர்களின் பிரம்ம முகுர்த்தம் மார்கழி மாதம் தான். சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் இது தனுர் மாதம் என்றும் அழைக்கப்படும். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூட ,'மாதங்களில் நான் மார்கழி 'என்று கூறுவார். அத்தனை சிறப்புமிக்க மாதம் மார்கழி.

மார்கழி திங்கள் , மார்கழி மாதத்தின் , மார்கழி மாதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.