"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் ",இது மார்கழி மாதம் ,ஆண்டாள் பாவை நோன்பு தொடங்கிய தினம் பௌர்ணமி என்பதால் 'மதி நிறைந்த நன்னாளாம் '.என்று ஆண்டாள் பாடியசிறப்பு மிக்க மாதம்.
மார்கழி மாதம் பூஜை ,பஜனை என்று தெய்வீகம் கமழும் மாதம் இது. இந்த மாதம் தெய்வத்திற்குரிய மாதம் என்று மக்களால் கொண்டப்படுக்கிறது. இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு பூஜை,பஜனை,வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் , உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். வடக்கு நோக்கிப்போகும் ஆறு திங்களைத் தட்சணாயனம் எனவும் வழங்குகிறது.வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம்உத்தராயணமே பகற்காலம்.தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.தேவர்களின் மாதமான இந்த மாதம் பொழுது விடிவதற்கு முந்தைய நேரத்தை 'பிரம்ம முகுர்த்தம் 'என்றும் ,'உஷத் காலம் 'என்றும் சொல்கிறோம்.
இவ்வாறு தேவர்களின் பிரம்ம முகுர்த்தம் மார்கழி மாதம் தான். சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் இது தனுர் மாதம் என்றும் அழைக்கப்படும். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூட ,'மாதங்களில் நான் மார்கழி 'என்று கூறுவார். அத்தனை சிறப்புமிக்க மாதம் மார்கழி.
மார்கழி திங்கள் , மார்கழி மாதத்தின் , மார்கழி மாதம்
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.