நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல்பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் பழங் குடியின மக்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்செய்து வருகிறார்.

இன்றைய பிரசார கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:-

ராமர் இளவரசராக அயோத்தியை விட்டு 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். காடுகளில் ஆதிவாசி மக்களுடன் வாழ்ந்து பழகிய பின்னர் ‘மரியாதை புருஷோத்தமன்’ ஆக மீண்டும் அயோத்திக்குவந்து நாடாண்டார்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சிசெய்த போது முதல் மந்திரி நாற்காலி விலைக்கு விற்கப்பட்டது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழலும் கொள்ளையும்தான் முக்கிய செய்திகளாக வந்தனர். பல தலைவர்கள் இன்னும் ஊழல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ்  கூட்டணி அரசியல் வஞ்சகம் மற்றும் துரோகத்தின் அடிப்படை யிலானது. பாஜகவின் அரசியல் மக்கள் சேவையை அடிப்படையாக கொண்டது. எங்கள் ஆட்சிக்காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும் போது பாஜக மீதும் தாமரை சின்னத்தின் மீதும் மக்களவைத்துள்ள நம்பிக்கை மிகதெளிவாக தெரிகிறது. இந்த மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக ஆட்சியால்மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என ஜார்க்கண்ட் மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...