திமுகவை கண்டித்து வரும் 20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தசட்டம் தொடர்பாக திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தசட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23ம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் கண்டனபேரணி நடத்த முடிவு செய்யப் பட்டது.
இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர் களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக சாதி, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடிக்க முயற்சிசெய்வதாக குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இலங்கை தமிழர்களின் விருப்பம் சார்ந்து கருத்துகேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |