அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு ஜார்கண்ட் மக்கள் அனைவரும் வீட்டிற்கு தலா ரூ.11 ம், செங்கலும் வழங்கும்படி உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜார்கண்ட்டில் டிச.,20 ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், அயோத்தியில் மிக விரைவில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கப்படும். அதற்காக ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். சமூகத்தின் பங்களிப்பிலேயே ராமராஜ்யம் இயங்குகிறது. ராம ராஜ்யசத்தில் எந்தபாகுபாடும் இன்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். சமூகம், இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் வளர்ச்சியும் அதில் அடங்கும் என்றார்.
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் நவ.,09ம் தேதி அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் டிச.,12 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணியை பா.ஜ.,வும், உ.பி., அரசும் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |