தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சிதேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்
எல்லோருடைய கருத்தின் அடிப்படையில் கட்சி முடிவு எடுக்கும். தமிழகத்தில் பாஜக காலம் துவங்கிவிட்டது, இதற்கு உதாரணம்தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு மிகபெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது.
தமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்று இருப்போம்.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், பாஜக.,வின் செல்வாக்கை காட்டி இருக்கமுடியும் என்பது என்னுடைய தனிப்பட்டகருத்து. ஆனாலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டோம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்றிருப்போம்.
என்னைப் பொருத்தவரை நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே, என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |