குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது

”குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் ., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரி செய்து வருகிறார்,” என, மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தசட்டத்தை ஆதரித்து, மதுரையில், பா.ஜ.க, சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:குடியுரிமை திருத்தசட்டத்தை கொண்டு வந்ததே, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியில் தான். அதை, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்து பவர்களுக்கு ஆதரவாக பேசி, தேசபாதுகாப்பிற்கு எதிராக கல்லெறிந்த திமுக.,  காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கக்கூடாது என்ற அரசாணை வெளியானபோது ஏன் எதிர்க்கவில்லை.

நாட்டை கொள்ளையடிக்கும் பணியை, தி.மு.க.,வுக்கு மன்மோகன்சிங் ஆட்சியில் வாய்ப்பு கொடுத்ததால் அக்கட்சி பேசவில்லை. ஆனால் இப்போது, தி.மு.க., கொதிக்கிறது.தி.மு.க.,வுக்கு எப்போதும், ஹிந்துக்கள் மீது நம்பிக்கைஇல்லை. காங்கிரசுக்கு சீக்கியர்கள் மீது நம்பிக்கை இல்லை.

தற்போது, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதையும் ஏன் இருகட்சிகளும் எதிர்க்கவேண்டும்.டில்லி பல்கலையில் மாணவர் போராட்டத்தை துாண்டிவிட்டது, காங்கிரஸ்தான்.ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது.அந்தவரிசையில், குடியுரிமை திருத்த சட்டத்தாலும், நாடுமுழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சியில் நடந்த பல்வேறு வரலாற்று பிழைகளை, தற்போது பிரதமர் மோடி சரிசெய்கிறார்; இது தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...