குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது

”குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் ., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரி செய்து வருகிறார்,” என, மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தசட்டத்தை ஆதரித்து, மதுரையில், பா.ஜ.க, சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:குடியுரிமை திருத்தசட்டத்தை கொண்டு வந்ததே, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியில் தான். அதை, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்து பவர்களுக்கு ஆதரவாக பேசி, தேசபாதுகாப்பிற்கு எதிராக கல்லெறிந்த திமுக.,  காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கக்கூடாது என்ற அரசாணை வெளியானபோது ஏன் எதிர்க்கவில்லை.

நாட்டை கொள்ளையடிக்கும் பணியை, தி.மு.க.,வுக்கு மன்மோகன்சிங் ஆட்சியில் வாய்ப்பு கொடுத்ததால் அக்கட்சி பேசவில்லை. ஆனால் இப்போது, தி.மு.க., கொதிக்கிறது.தி.மு.க.,வுக்கு எப்போதும், ஹிந்துக்கள் மீது நம்பிக்கைஇல்லை. காங்கிரசுக்கு சீக்கியர்கள் மீது நம்பிக்கை இல்லை.

தற்போது, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதையும் ஏன் இருகட்சிகளும் எதிர்க்கவேண்டும்.டில்லி பல்கலையில் மாணவர் போராட்டத்தை துாண்டிவிட்டது, காங்கிரஸ்தான்.ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது.அந்தவரிசையில், குடியுரிமை திருத்த சட்டத்தாலும், நாடுமுழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சியில் நடந்த பல்வேறு வரலாற்று பிழைகளை, தற்போது பிரதமர் மோடி சரிசெய்கிறார்; இது தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...