5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல

நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பொருளாதாரம் மிக வீழ்ச்சிகண்டு வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. ஒருபுறம் இந்த வீழ்ச்சியினால் அடுத்து வரும் காலாண்டுகளிலும் வீழ்ச்சி காணும், இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் $5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைவது கஷ்டம்தான் என்று பல நிபுணர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய அரசின் $5 டிரில்லியன் இலக்கை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம் இந்தூர் நிர்வாகத்தின் 29வது சர்வதேசமேலாண்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நிதின் கட்கரி, அங்கு பேசுகையில், 2024ம் ஆண்டில் இந்தியாவைப் 5 டிரில்லியன் டாலர் இலக்குகொண்ட பொருளாதாரத்தை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றதல்ல.

எந்தவொரு வலுவான இலக்கினையும் அடைய வலுவான அரசியல்விருப்பம் மிக முக்கியம். அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி $5 டிரில்லியன் இலக்கை அடைய இலக்கு வைத்துள்ளார். இந்தஇலக்கை அடைவது கடினம் தான். ஆனால் சாத்தியமற்றதல்ல

நம் நாட்டில் ஏராள மான வளங்களும் உற்பத்தி திறனும் உள்ளன. இருந்தாலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை இறக்குமதிசெய்வதிலும், நிலக்கரி, காப்பர், காகிதங்கள் உள்ளிட்ட பலபொருட்களை இறக்குமதிசெய்ய கோடிகணக்கில் செலவு செய்கிறோம்.

நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய விரும்பினால் அதிகளவில் இறக்குமதி செய்வதை தவிர்த்து, அதற்குபதிலாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

நாங்கள் உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். ஆனால் தற்போது வணிகத்தில் ஒருசுழற்சி உள்ளது. மேலும் விவசாயத்திலும் சவாலான நிலை உள்ளது. மேலும் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவிவரும் மந்த நிலை காரணமாகவும், தேவைமந்தம் காரணமாகவும் மந்த நிலை நிலவி வருகிறது.

எனினும் நாட்டில் நிலவிவரும் மந்தநிலை ஒருபுறம் இருந்தாலும், நாட்டில் நிலவி வரும் சிரமங்களையும், சில சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றக்கூடிய இளைய தலைமுறையினரின் தலைவர்களில் இந்தியாவின் எதிர் காலத்தை நான் காண்கிறேன்.

நாட்டில் மூலதனம் மற்றும் வளங்கள், தொழில் நுட்பத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் நிச்சயமாக பல்வேறு துறைகளில் சரியான பார்வை மற்றும் தலைமை இல்லை  சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதன் மூலம் ஏற்றுமதிகள் ஆதரிக்கப்படும்.

இந்த முயற்சியானது ஐந்துகோடி புதிய வேலைகளை உருவாக்க உதவும், இது 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய ஒவ்வொரு துறையும், பங்கு அளிக்கசெய்ய முடியும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...