5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல

நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பொருளாதாரம் மிக வீழ்ச்சிகண்டு வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. ஒருபுறம் இந்த வீழ்ச்சியினால் அடுத்து வரும் காலாண்டுகளிலும் வீழ்ச்சி காணும், இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் $5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைவது கஷ்டம்தான் என்று பல நிபுணர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய அரசின் $5 டிரில்லியன் இலக்கை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம் இந்தூர் நிர்வாகத்தின் 29வது சர்வதேசமேலாண்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நிதின் கட்கரி, அங்கு பேசுகையில், 2024ம் ஆண்டில் இந்தியாவைப் 5 டிரில்லியன் டாலர் இலக்குகொண்ட பொருளாதாரத்தை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றதல்ல.

எந்தவொரு வலுவான இலக்கினையும் அடைய வலுவான அரசியல்விருப்பம் மிக முக்கியம். அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி $5 டிரில்லியன் இலக்கை அடைய இலக்கு வைத்துள்ளார். இந்தஇலக்கை அடைவது கடினம் தான். ஆனால் சாத்தியமற்றதல்ல

நம் நாட்டில் ஏராள மான வளங்களும் உற்பத்தி திறனும் உள்ளன. இருந்தாலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை இறக்குமதிசெய்வதிலும், நிலக்கரி, காப்பர், காகிதங்கள் உள்ளிட்ட பலபொருட்களை இறக்குமதிசெய்ய கோடிகணக்கில் செலவு செய்கிறோம்.

நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய விரும்பினால் அதிகளவில் இறக்குமதி செய்வதை தவிர்த்து, அதற்குபதிலாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

நாங்கள் உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். ஆனால் தற்போது வணிகத்தில் ஒருசுழற்சி உள்ளது. மேலும் விவசாயத்திலும் சவாலான நிலை உள்ளது. மேலும் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவிவரும் மந்த நிலை காரணமாகவும், தேவைமந்தம் காரணமாகவும் மந்த நிலை நிலவி வருகிறது.

எனினும் நாட்டில் நிலவிவரும் மந்தநிலை ஒருபுறம் இருந்தாலும், நாட்டில் நிலவி வரும் சிரமங்களையும், சில சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றக்கூடிய இளைய தலைமுறையினரின் தலைவர்களில் இந்தியாவின் எதிர் காலத்தை நான் காண்கிறேன்.

நாட்டில் மூலதனம் மற்றும் வளங்கள், தொழில் நுட்பத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் நிச்சயமாக பல்வேறு துறைகளில் சரியான பார்வை மற்றும் தலைமை இல்லை  சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதன் மூலம் ஏற்றுமதிகள் ஆதரிக்கப்படும்.

இந்த முயற்சியானது ஐந்துகோடி புதிய வேலைகளை உருவாக்க உதவும், இது 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய ஒவ்வொரு துறையும், பங்கு அளிக்கசெய்ய முடியும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...