கடமையை செய்வோம் தேசத்தை காப்போம்

இந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய  370 சிறப்பு சட்ட நீக்கத்துக்கு பிந்தைய முதல் குடியரசு தினம். 370 நீக்கத்தால்  மத்திய அரசின் எண்ணற்ற சலுகைகளை தடைகளின்றி சுவைக்கும் காஷ்மீரிகளுக்கு முழுமையான முதல் குடியரசு தினம் இதுவென்று என்றே கூறவேண்டும்.

எண்ணிலடங்கா தேச பக்தர்களின் தியாகங்கள், வலிமிகுந்த போராட்டங்கள், சிறை காலங்கள், உயிர் பலிகள், இரத்த கறைகளை கொண்டது நமது சுதந்திரம், பெற்ற சுதந்திரத்தையும் நாம் இன்பமாக பெறவில்லை, மதத்தின் அடிப்படையில் தேசத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானாக பிரித்து கொடுத்த வலியுடனே பெற்றோம். அத்தகைய தேசம் குடியரசான  நாள் இன்று.

இன்று நாம் ஜன நாயகத்தின் உச்சத்தில் வாழ்கிறோம், இங்கு எந்த அடிமைத்தனமும் இல்லை, நாட்டுக்காக போராட, உயிர் நீக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.அதேநேரத்தில்  உரிமைகளை மட்டுமே சிந்திக்கும் சுயநலன் நிரைந்த காலம் இது. தேசத்தின் நலன் சார்ந்த கொண்ட கடமையை சிந்திக்க மறுக்கும் காலம் இது . பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க மறந்த காலமும் இது.

இல்லாவிடில் காசுக்காக  வாக்களிக்கும் கூட்டம் பெருகி இருக்குமா?. காசை மட்டுமே நம்பி போட்டியிடும் கொள்கை மறந்த கட்சிகள், வேட்பாளர்கள் பெருகியிருப்பார்களா?. சிறுபான்மை ஓட்டுக்காக, ஜாதிய ஓட்டுக்காக தேச நலனையே அடகு வைக்கும் கட்சிகளுக்கும் இங்கு இடம் இருந்திருக்குமா?.

இந்த சூழல் மிகவும் ஆபத்தானது. இது நம்மை மீண்டும் அடிமை தனத்துக்கோ, மதத்தின் அடிப்படையிலான பிரிவினைக்கோ இழுத்துச் சென்றுவிடும். இதன் ஒரு அங்கம்தான் பாக்கிஸ்தான், பங்களாதேஸ் இஸ்லாமியரின் இந்திய குடியேற்றமும். அதை தடுக்க முயற்சிக்கும் பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் போராட்டங்களும். எனவே கடமையை செய்வோம் தேசத்தை காப்போம்.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ்  

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...