வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி கிடையாது

வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரிகிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்குவரி விதிக்கப்படும்.

இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று முதல்நாள் தாக்கல் செய்யப் பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்தபட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தற்போதைய வழக்கப்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் வரிசெலுத்த தேவையில்லை. அதேபோல் அவர்கள் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களுக்கும் வரி செலுத்துவதில்லை. உதாரணமாக வெளிநாட்டில் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் இந்தியாவில் வரிசெலுத்த மாட்டார்கள். அதேபோல் அந்தவருவாய் மூலம் இந்தியாவில் தொழில்செய்தால், இந்தியாவிலும் அவர்கள் வரி செலுத்த மாட்டார்கள்.

இந்த நிலையில்தான் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு நிறைய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரிகிடையாது என்று கூறியுள்ளார். அவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்களோ அங்கே வரிகொடுத்தால் போதும். இங்கே அளிக்க வேண்டியது இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றில் வருமானவரி கிடையாது. அப்படி வருமான வரி இல்லாதவர்களும் இந்தியாவில் வருமானவரி அளிக்க வேண்டியது இல்லை. ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்குவரி விதிக்கப்படும். உதாரணமாக உள்நாட்டில் வீடு இருந்து, அதை வாடகைக்கு கொடுத்தால் வரி வசூலிக்கப் படும். உள்நாட்டில், வெளிநாட்டு பணத்தையே வைத்து தொழில்தொடங்கி, லாபம் பார்த்தால் அதற்கும் வரி வசூலிக்கப்படும்.

இதன் மூலம் வரி அதிகம் வசூலிக்கப்படும் என்று நிதி அமைச்சக கூறுகிறது. இந்த புதிய விதி முறை இந்த நிதி ஆண்டில் அமலுக்கு வரும் .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...