வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி கிடையாது

வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரிகிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்குவரி விதிக்கப்படும்.

இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று முதல்நாள் தாக்கல் செய்யப் பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்தபட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தற்போதைய வழக்கப்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் வரிசெலுத்த தேவையில்லை. அதேபோல் அவர்கள் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களுக்கும் வரி செலுத்துவதில்லை. உதாரணமாக வெளிநாட்டில் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் இந்தியாவில் வரிசெலுத்த மாட்டார்கள். அதேபோல் அந்தவருவாய் மூலம் இந்தியாவில் தொழில்செய்தால், இந்தியாவிலும் அவர்கள் வரி செலுத்த மாட்டார்கள்.

இந்த நிலையில்தான் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு நிறைய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரிகிடையாது என்று கூறியுள்ளார். அவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்களோ அங்கே வரிகொடுத்தால் போதும். இங்கே அளிக்க வேண்டியது இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றில் வருமானவரி கிடையாது. அப்படி வருமான வரி இல்லாதவர்களும் இந்தியாவில் வருமானவரி அளிக்க வேண்டியது இல்லை. ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்குவரி விதிக்கப்படும். உதாரணமாக உள்நாட்டில் வீடு இருந்து, அதை வாடகைக்கு கொடுத்தால் வரி வசூலிக்கப் படும். உள்நாட்டில், வெளிநாட்டு பணத்தையே வைத்து தொழில்தொடங்கி, லாபம் பார்த்தால் அதற்கும் வரி வசூலிக்கப்படும்.

இதன் மூலம் வரி அதிகம் வசூலிக்கப்படும் என்று நிதி அமைச்சக கூறுகிறது. இந்த புதிய விதி முறை இந்த நிதி ஆண்டில் அமலுக்கு வரும் .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...